ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

 உடல் பொன்னிறமாக
ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு செய்து உண்ணலாம். நாளடைவில் தேஜஸ் உண்டாகும்.

நீர் வேட்கை தனிய வேண்டுமானால், ஆவாரம் பூவைத் தேவையானதை எடுத்து ஊற வைத்துக் குடிநீர் தயார் செய்து அருந்தலாம்.

இப்பூவை சமையலில் பக்குவப்படுத்திச் சாப்பிட கற்றாழை வாசனை, நீரிழிவு, உடம்பில் உப்புப் பூத்தல் வறட்சி சமப்படும்.

இதை வதக்கி கண் நோய்க்கு ஒத்தடம் இடலாம் குடி நீரிட்டுப் பால் சேர்த்துச் சாப்பிட உட்சூடு தணியும். இப் பூவுடன், பச்சைப் பயறு சேர்த்தரைத்து நமைச்சலுக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.

உடல் சூடு, மேகவெட்டை, துர்நாற்றம் நீங்க
தேவையான ஆவாரம் பூக்களைக் கொண்டு வந்து சுத்தம் பார்த்து வெயிலில் உலர்த்திக் காய வைத்து எடுத்து இடித்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு இத்தூளை மெல்லிய துணியில் போட்டு வடிகட்டி, வடிகட்டிய தூளைக் காய்ச்சிய பாலில் ஒரு தேக்கரண்டி போட்டு சிறிது சர்க்கரை சேர்த்து அருந்தி வர உடலில் காணும் துர்நாற்றம், வியர்வை மற்றும் உடலின் வறட்சியையும் சோர்வையும் போக்கி வலிமையைத் தரும். இப்பூவுக்கு உடல் நிறத்தைத் தங்க நிறமாக மாற்றும் ஆற்றலுண்டு.

மஞ்சள்நிறப் பூப் பூத்து நம்மைக் கவர்ந்திழுக்கும் ஆவாரையின் மருத்துவக் குணம் காலம் காலமாகச் சிறந்த ஒன்றாகும்.

 

கிராமப்புறங்களில் இதன் இலை, பூ, காய்களைப் பறித்து வந்து இளம் வெய்யிலிலும், நிழலிலுமாக உலர்த்தி வற்றல் இட்டு வைத்துக் கொள்வார்கள். தயிரில் சிறிது உப்பிட்டு அதில் கொட்டி ஊற வைத்து மறுநாள் காலையில் அதை வெய்யிலில் வைத்து மீண்டும் இரவில், எஞ்சிய அதே தயிரில் கொட்டி வைத்து மறுநாள் மீண்டும் காய வைத்து இவ்விதமாகச் சுண்டைவற்றல், மோர் மிளகாய் இவற்றைத் தயாரிப்பது போலத் தயாரித்து வைத்துக் கொண்டு தேங்காய் எண்ணெய்யில் வறுத்துச் சாப்பிட ருசியாகவும் அதே நேரத்தில் சர்வ ரோகங்களையும், குறிப்பாக மேக சம்பந்தப்பட்ட நோய்களையும் ‘குறி’ சம்பந்தப்பட்ட நோய்களையும், நீரிழிவையும் குணப்படுத்தும் நல்ல மருந்துப் பொருளாகும்.

 

பூ, காய், மொட்டு இவைகளை உலர்த்தி வைத்துக் கொண்டு வேண்டுமளவு இட்டுக் கொதிக்க வைத்து இதனுடன் பனங்கற்கண்டு, பசும்பால் சேர்த்துப் பருகினால் சிறந்த பானமாகும்.

 

மொட்டு, பூ இவைகளை இட்டு அவியல் வைத்துச் சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும்.

 

ஆவாரம்பூவைச் சுத்தம் செய்து பாசிப் பருப்புடன் சேர்த்துக் கூட்டுச் செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு, சிறுநீருடன் இரத்தம் வெளியாதல், பெண்களைப் பொறுத்தவரையில் பெரும்பாடு போன்றவை குணமாகும்.

 

ஆவாரம் பூக்களை நிறைய அளவில் கொண்டு வந்து சுத்தம் செய்து வதக்கி கற்கண்டு சேர்த்து ஆட்டுக்கல்லில் அல்லது மிக்சியில் இட்டு நன்கு அரைத்துப் பின்னர் சுத்தமான புதிய தேன் கலந்து நன்கு பிசைந்து வெய்யிலில் இரண்டு தினங்கள் காய வைத்துப் புட்டியில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் இரண்டு வேளை ஒரு தேக்கரண்டி அளவு உட்கொண்டு வந்தால் நீரிழிவு குணமாகும். நீர்க்க்கடுப்பு உட்சூடு இவை குணமாகும்.

 

இந்தப் பூவை நன்கு உலர்த்திப் பொடி செய்து கடலை மாவுடன் கலந்து தேய்த்துக் குளித்து வரக் கற்றாழை நாற்றம், தேகத்தில் உப்புப் படிதல் இவை குணமாகும்.

 

ஆவாரைச் செடியினுடைய பிசின் கிடைப்பது கஷ்டம். எறும்புகள் இந்தப் பிசினை விட்டு வைக்க மாட்டா. இந்தப் பிசின் கிடைத்தால் இதைச் சேர்த்து வைத்துக் கொண்டு, தினமும் நான்கு குன்றிமணி எடை எடுத்துப் பொடித்துப் பசுவின் பாலைக் காய்ச்சி ஆற வைத்து அதனுடன் கலந்து ஒரு மண்டலம் உட்கொள்ள நீரிழிவு குணமாகும். தாது நஷ்டத்தை ஈடுகட்டும். ஆண்மை தன்மை பெருகும்.

 

ஆவாரம் பூவை பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை பொரியல் செய்து சாப்பிடலாம்.

 

இந்தப் பூவை உலர்த்திப் பொடி செய்து, மஞ்சள், சந்தனம், கோரைக்கிழங்கு இவைகளுடன் மூலிகை வாசனைப் பொருட்களையும் சேர்த்துக் குளிக்கும்போது தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

TAG; ஆவாரம் பூ, உடல் பொன்னிறமாக, ரிழிவு, உடம்பில் உப்புப் பூத்தல், உடல் சூடு, மேகவெட்டை, துர்நாற்றம் நீங்க, நீர் கடுப்பு, உட்சூடு, தோல் நோய், பூ, ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

 

One response to “ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...