கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் மூன்று நாட்கள் கொடுக்க சீதபேதி குணமாகும்.
அம்மை போட்டபின் முகத்தில் பள்ளம் பள்ளமாக வடு தோன்றும். இதைப் போக்க கறிவேப்பிலை 3௦ கிராம், கசகசா 15௦ கிராம், கஸ்தூரி மஞ்சள் 8 கிராம் இவைகளை மைபோல அரைத்து முகத்தில் கனமாகத் தடவி அரை மணிக்குப் பின் கழுவி விடவும். 7 நாட்கள் செய்தால் வடு மாறும்.
இதை மனத்துக்காக குழம்பு, சாம்பார், காய்கறிகளில் சேர்ப்பது உண்டு. துவையல் செய்தும் உண்ணலாம். சுரம், பித்தம் தீரும். அருசியை மாற்றும். பசி உண்டாக்கும். தீனிப்பைக்கு வலிவு கொடுக்கும். இத்துடன் நெய் சேர்த்துக்கொள்வது நல்லது.
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.