சர்வதேச அரங்கில் தலை நிமிர்ந்துநிற்கும் தருணம் ஒவ்வொரு பாரதியனுக்கும் வந்திருக்கிறது!!

சீனா தாக்கினால் ரஷ்யா உதவிக்குவராது என்று இந்தியாவை அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் எச்சரித்திருக்கிறார்! அதாவது, உக்ரைன் விவகாரத்தில் எங்கள்பக்கம் நிற்காமல், ரஷ்யா பக்கம் நிற்கிறீர்கள், வியாபார ஒப்பந்தம் போடுகிறீர்கள், ஆயுதம் வாங்குகிறீர்கள், மலிவுவிலையில் எண்ணெய் வாங்குகிறீர்கள், ரூபாய்-ரூபிள் வர்த்தகம் செய்கிறீர்கள்! ஆனால், சீனாதாக்கும்போது ரஷ்யா உங்களுக்கு உதவாது, நாங்கள்தான் வரவேண்டும். அப்போது உங்களை வைத்துக் கொள்கிறோம் என்ற பொருள்பட கதறி இருக்கிறார்!.

அதற்கு, போங்கடா போக்கத்த பசங்களா, போய் உங்கவேலைய மட்டும் பாருங்கடா என்ற அர்த்தத்தில் பதில்கூறி இருக்கிறார் நமது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர்! ரஷ்ய போருக்கு முன் வாங்கியதை விட அதிக எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து வாங்கியது உங்கள் அணியில் உள்ள ஐரோப்பிய நாடுகள தான். ரஷ்யாவுடன் நீங்கள் செய்யும் வர்த்தகத்தில் ஏழில் ஒருபங்குதான் நாங்கள் செய்கிறோம். எங்கள் தேவையில் ஐந்து சதவிகிதம்தான் ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறோம் என்று பதிலளித்திருக்கிறார். அதாவது, எங்களை குறைகூறும் முன்பாக உங்கள் முதுகை பார்த்துக் கொள்ளுங்கள்! கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் என்று எச்சரிக்காத குறைதான்.

கடந்த 18 நாட்களில் 15 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இந்தியா வந்திருக்கிறார்கள். வந்தவர்கள் இந்தியாவை தங்கள் அணியில் இழுக்கவோ, சமாதானம் செய்யும்படி கேட்கவோ அல்லது பொருளாதார உதவிகேட்டோ வந்திருக்கிறார்கள்! உலகின் மிகவும் முக்கிய பொறுப்புமிக்க நிலைக்கு இந்தியா வந்திருக்கிறது! ஏறத்தாழ உலகின் நாட்டாமை!! இத்தனைக்கும் காரணம் கடந்த ஏழுஆண்டுகள் இங்கு நிலவும் அரசுதான்!.

நம்மைச் சுற்றியுள்ள நாடுகள் நிலை குலைந்துள்ள இந்த நேரத்தில், இந்தியா எடுக்கும் எந்த முடிவும், இந்தியாவோடு சேர்ந்து அந்நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்! அதை இந்தியா நன்கு உணர்ந்திருக்கிறது! அதனால் தான் இலங்கைக்கு உதவி இருக்கிறோம்.
சர்வதேச அரங்கில் தலை நிமிர்ந்துநிற்கும் தருணம் ஒவ்வொரு பாரதியனுக்கும் வந்திருக்கிறது!!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...