சர்வதேச அரங்கில் தலை நிமிர்ந்துநிற்கும் தருணம் ஒவ்வொரு பாரதியனுக்கும் வந்திருக்கிறது!!

சீனா தாக்கினால் ரஷ்யா உதவிக்குவராது என்று இந்தியாவை அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் எச்சரித்திருக்கிறார்! அதாவது, உக்ரைன் விவகாரத்தில் எங்கள்பக்கம் நிற்காமல், ரஷ்யா பக்கம் நிற்கிறீர்கள், வியாபார ஒப்பந்தம் போடுகிறீர்கள், ஆயுதம் வாங்குகிறீர்கள், மலிவுவிலையில் எண்ணெய் வாங்குகிறீர்கள், ரூபாய்-ரூபிள் வர்த்தகம் செய்கிறீர்கள்! ஆனால், சீனாதாக்கும்போது ரஷ்யா உங்களுக்கு உதவாது, நாங்கள்தான் வரவேண்டும். அப்போது உங்களை வைத்துக் கொள்கிறோம் என்ற பொருள்பட கதறி இருக்கிறார்!.

அதற்கு, போங்கடா போக்கத்த பசங்களா, போய் உங்கவேலைய மட்டும் பாருங்கடா என்ற அர்த்தத்தில் பதில்கூறி இருக்கிறார் நமது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர்! ரஷ்ய போருக்கு முன் வாங்கியதை விட அதிக எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து வாங்கியது உங்கள் அணியில் உள்ள ஐரோப்பிய நாடுகள தான். ரஷ்யாவுடன் நீங்கள் செய்யும் வர்த்தகத்தில் ஏழில் ஒருபங்குதான் நாங்கள் செய்கிறோம். எங்கள் தேவையில் ஐந்து சதவிகிதம்தான் ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறோம் என்று பதிலளித்திருக்கிறார். அதாவது, எங்களை குறைகூறும் முன்பாக உங்கள் முதுகை பார்த்துக் கொள்ளுங்கள்! கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் என்று எச்சரிக்காத குறைதான்.

கடந்த 18 நாட்களில் 15 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இந்தியா வந்திருக்கிறார்கள். வந்தவர்கள் இந்தியாவை தங்கள் அணியில் இழுக்கவோ, சமாதானம் செய்யும்படி கேட்கவோ அல்லது பொருளாதார உதவிகேட்டோ வந்திருக்கிறார்கள்! உலகின் மிகவும் முக்கிய பொறுப்புமிக்க நிலைக்கு இந்தியா வந்திருக்கிறது! ஏறத்தாழ உலகின் நாட்டாமை!! இத்தனைக்கும் காரணம் கடந்த ஏழுஆண்டுகள் இங்கு நிலவும் அரசுதான்!.

நம்மைச் சுற்றியுள்ள நாடுகள் நிலை குலைந்துள்ள இந்த நேரத்தில், இந்தியா எடுக்கும் எந்த முடிவும், இந்தியாவோடு சேர்ந்து அந்நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்! அதை இந்தியா நன்கு உணர்ந்திருக்கிறது! அதனால் தான் இலங்கைக்கு உதவி இருக்கிறோம்.
சர்வதேச அரங்கில் தலை நிமிர்ந்துநிற்கும் தருணம் ஒவ்வொரு பாரதியனுக்கும் வந்திருக்கிறது!!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...