பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்பரேஷன் சிந்துார் என்ற பெயரில் நம் ராணுவம் நடவடிக்கை எடுத்தது. இதில் அந்நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த விஷயத்தில், நம் தரப்புக்கு உலக அரங்கில் ஆதரவு திரட்டவும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானின் செயல்கள் குறித்து ஆதாரத்துடன் விளக்கவும் அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.

தி.மு.க., – எம்.பி., கனிமொழி தலைமையிலான குழுவினர் நேற்று ரஷ்யா சென்றனர். இக்குழுவில் பா.ஜ., – எம்.பி., பிரிஜேஷ் சவுதா, சமாஜ்வாதி எம்.பி., ராஜீவ் ராய் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

மாஸ்கோ சென்ற குழுவை ரஷ்ய வெளியுறவு துணை அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ வரவேற்றார். அதன் பின் ரஷ்ய பார்லிமென்டின் அனைத்து கட்சி எம்.பி.,க்கள் உடனான கூட்டத்தில், கனிமொழி தலைமையிலான எம்.பி.,க் கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை ரஷ்ய தரப்பு அதிகாரிகள் கண்டித்ததுடன், பயங்கரவாதத்தை ஒடுக்கும் இந்தியாவின் முயற்சிக்கு துணை நிற்போம் என உறுதி அளித்தனர்.

ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு கனிமொழி தலைமையிலான குழு இன்று ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியா செல்கிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...