எலான் மஸ்க் தாராளமாக இந்தியாவில் டெஸ்லா காரை உற்பத்தி செய்து விற்கலாம்

ரெய்சினா பேச்சு வார்த்தை 2022 நிகழ்வை பிரதமர் நரேந்திரமோடி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் வ்ரூசுலா வான் டோர் டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தனர். வெளியுறவுக் கொள்கை மற்றும் சர்வதேச பொருளாதாரம் ஆகியவற்றை குறித்த கருத் தரங்கு இந்த நிகழ்வில் நடைபெறும். இதில், 90க்கும் மேற்பட்ட நாடுகளின் 210 பிரதிநிதிகள் பேசவுள்ளனர்.

இந்தநிகழ்வில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று பேசினார். அவர் தனது உரையில், டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க், நாட்டில் எலக்ட்ரிக் வாகனம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகுறித்து பேசினார். அவர் கூறியதாவது, “எலான் மஸ்க் இந்தியாவில் வந்து டெஸ்லா கார்களை தயாரித்து விற்பனை செய்ய நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். அதற்கு எந்ததயக்கமும் தடையும் இல்லை. நம்மிடம் அதற்கான திறன் உள்ளன. தொழில்நுட்பவசதி உள்ளன. இதன் மூலம் காரின் விற்பனை விலையும் குறையும்.

இந்தியா மிகப்பெரிய சந்தையாகும். இங்கு ஏற்றுமதிக்கும் நல்ல வாய்ப்புள்ளது. எனவே, எலான் மஸ்க் தாராளமாக இந்தியாவில் டெஸ்லா காரை உற்பத்தி செய்து விற்கலாம். அதேவேளை, சீனாவில் கார்களை உற்பத்திசெய்து அவற்றை இந்தியாவில் வந்து விற்க நினைத்தால் அதை நாங்கள் ஏற்கமுடியாது” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...