ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

 அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய குறுஞ்செடி ஊமத்தை. இதில் அரிதாகக் கிடைக்கும் கரு ஊமத்தையே மருத்துவக் குணம் மிக்கதாக உள்ளது. பொதுவாக நோய்த் தணிக்கவும், சிறப்பாக இசிவு நோய்த் தணிக்கவும் செயல்படுகிறது.

வெள்ளை பூ பூக்கும் ஊமத்தைச் சாதாரணமாய் எங்கும் கிடைக்கும். இது தவிர கரு ஊமத்தை, பொன்னூமத்தை, அடுக்கு ஊமத்தை, மருஊமத்தை என்ற வகைகளும் உண்டு.

 

இதன் சமூலத்தை அரைத்து நாய்க்கடிப்புண், ஆறாத குளிப்புண், தோல் கட்டிகள், நஞ்சு, திரிதோடம் ஆகியவைகளைப் போக்கும்.

 

இதன் இலையை உலர்த்தி பொடி செய்து ½ (or) 1½ குன்றிமணியளவு உள்ளுக்குக் கொடுக்க சுவாச காசம் நீங்கும்.

 

இலையை வதக்கி ஒற்றடமிடக் கீல்வாதம்,  எலும்பு வீக்கம், வித்திருதி கட்டிகளினால் உண்டாகும் வேதனையும், பால் கட்டிக் கொள்வதால் உண்டாகும் வேதனையும் நீங்கும்.

 

இலை, அரிசிமாவு இரண்டையும் சமமாக எடுத்துக் கொஞ்சம் நீர் விட்டரைத்து களிபதமாய் வேகவைத்து, எலும்பு மூட்டு இவ்விடங்களில் உண்டாகும் வீக்கம். இதனால் வேதனைத் தரும் கட்டிகள் வெளிமூலம் இவைகளுக்குப் பற்றிட குணமாகும். ஆனால் புண், காயம் இவைகளுக்குப் போடக் கூடாது. நரம்புச் சிலந்திக்கு இதை உபயோகிக்கலாம். இலை அல்லது பூ 75 கிராம் எடுத்து இடித்து 1 லிட்டர் நீருடன் சேர்த்துக் காய்ச்சி மேற்கண்ட நோய்களுக்கு ஒற்றடமிடலாம்.

 

கரும்பு வெல்லத்தில் இலையின் சாறு, பூவின்சாறு 1:3 துளி உள்ளுக்குக் கொடுத்து பால் சோறு, மோர் சோறு ஆகாரமாகக் கொள்ள பேய் நாய்க்கடி விஷம் தீரும். 3 நாட்கள் கொடுத்தால் போதும். உப்பு, புளி நீக்கி பத்தியம் இருக்க வேண்டும். தயிரில் இதன் சாறு 5 முதல் 10 துளி சேர்த்துக் கொடுக்க பிரமேகம் தணியும். இலை ரசத்தை 1 (or) 2 துளி காதில்விடக் காது கடுவழித் தீரும். வீக்கம் உள்ள இடங்களில் தடவலாம்.

 

ஊமத்தை இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி இளஞ்சூட்டுடன் காதில் விடச் சீதளத்தால் வந்த காதுவலி நீர்ந்து குணமாகும்.

ஊமத்தை இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டவியலாய் அவித்து உலர்த்தி தூள் செய்து (ஒன்றிரண்டாய்) சுருட்டாய் செய்து புகைப்பிடிக்க ஆஷ்துமா, மூச்சுத்திணறல் உடனே குணமாகும்.

இலையை நல்லெண்ணெயில் வதக்கிக்கட்ட வாதவலி, மூட்டு வீக்கம் வாயுக்கட்டிகள், அண்டவாயு, தாய்ப்பால் கட்டிக் கொண்டு வலித்தல் ஆகியவை தீர்ந்து குணமாகும்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.ம ...

தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு பொய்யான வாக்குறுதிகள் கொடுத்துத் விவசாயிகளை ஏமாற்றி வரும் தி.மு.க., ...

மோடி வேண்டும் என சொல்லும் பாகிஸ ...

மோடி வேண்டும் என சொல்லும் பாகிஸ்தானியர் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை சுமூகமான சூழலில் கொண்டுசெல்ல ...

எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் ...

எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் போராளி பிரதமர் மோடி – நடிகர் ரஜினிகாந்த் 'பஹல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது; மோடி ஜம்மு-காஷ்மீருக்கு அமைதியைக் கொண்டுவருவார்,' ...

சினிமா தயாரிப்பில் உலகின் மையம� ...

சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம் ''சினிமா தயாரிப்பில் உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது'' ...

பிரதமர் மோடிக்கு பதில் ரஷ்யா செ ...

பிரதமர் மோடிக்கு பதில் ரஷ்யா செல்லும் ராஜ்நாத் சிங் ரஷ்யாவில் நடக்கும் இரண்டாம் உலகப்போர் வெற்றி விழா அணிவகுப்பில், ...

ராணுவத்திற்கு பின்னால் ஒவ்வொர� ...

ராணுவத்திற்கு பின்னால் ஒவ்வொரு குடிமகனும் இருப்பர்: அசாம் முதல்வர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டால், ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...