ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

 அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய குறுஞ்செடி ஊமத்தை. இதில் அரிதாகக் கிடைக்கும் கரு ஊமத்தையே மருத்துவக் குணம் மிக்கதாக உள்ளது. பொதுவாக நோய்த் தணிக்கவும், சிறப்பாக இசிவு நோய்த் தணிக்கவும் செயல்படுகிறது.

வெள்ளை பூ பூக்கும் ஊமத்தைச் சாதாரணமாய் எங்கும் கிடைக்கும். இது தவிர கரு ஊமத்தை, பொன்னூமத்தை, அடுக்கு ஊமத்தை, மருஊமத்தை என்ற வகைகளும் உண்டு.

 

இதன் சமூலத்தை அரைத்து நாய்க்கடிப்புண், ஆறாத குளிப்புண், தோல் கட்டிகள், நஞ்சு, திரிதோடம் ஆகியவைகளைப் போக்கும்.

 

இதன் இலையை உலர்த்தி பொடி செய்து ½ (or) 1½ குன்றிமணியளவு உள்ளுக்குக் கொடுக்க சுவாச காசம் நீங்கும்.

 

இலையை வதக்கி ஒற்றடமிடக் கீல்வாதம்,  எலும்பு வீக்கம், வித்திருதி கட்டிகளினால் உண்டாகும் வேதனையும், பால் கட்டிக் கொள்வதால் உண்டாகும் வேதனையும் நீங்கும்.

 

இலை, அரிசிமாவு இரண்டையும் சமமாக எடுத்துக் கொஞ்சம் நீர் விட்டரைத்து களிபதமாய் வேகவைத்து, எலும்பு மூட்டு இவ்விடங்களில் உண்டாகும் வீக்கம். இதனால் வேதனைத் தரும் கட்டிகள் வெளிமூலம் இவைகளுக்குப் பற்றிட குணமாகும். ஆனால் புண், காயம் இவைகளுக்குப் போடக் கூடாது. நரம்புச் சிலந்திக்கு இதை உபயோகிக்கலாம். இலை அல்லது பூ 75 கிராம் எடுத்து இடித்து 1 லிட்டர் நீருடன் சேர்த்துக் காய்ச்சி மேற்கண்ட நோய்களுக்கு ஒற்றடமிடலாம்.

 

கரும்பு வெல்லத்தில் இலையின் சாறு, பூவின்சாறு 1:3 துளி உள்ளுக்குக் கொடுத்து பால் சோறு, மோர் சோறு ஆகாரமாகக் கொள்ள பேய் நாய்க்கடி விஷம் தீரும். 3 நாட்கள் கொடுத்தால் போதும். உப்பு, புளி நீக்கி பத்தியம் இருக்க வேண்டும். தயிரில் இதன் சாறு 5 முதல் 10 துளி சேர்த்துக் கொடுக்க பிரமேகம் தணியும். இலை ரசத்தை 1 (or) 2 துளி காதில்விடக் காது கடுவழித் தீரும். வீக்கம் உள்ள இடங்களில் தடவலாம்.

 

ஊமத்தை இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி இளஞ்சூட்டுடன் காதில் விடச் சீதளத்தால் வந்த காதுவலி நீர்ந்து குணமாகும்.

ஊமத்தை இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டவியலாய் அவித்து உலர்த்தி தூள் செய்து (ஒன்றிரண்டாய்) சுருட்டாய் செய்து புகைப்பிடிக்க ஆஷ்துமா, மூச்சுத்திணறல் உடனே குணமாகும்.

இலையை நல்லெண்ணெயில் வதக்கிக்கட்ட வாதவலி, மூட்டு வீக்கம் வாயுக்கட்டிகள், அண்டவாயு, தாய்ப்பால் கட்டிக் கொண்டு வலித்தல் ஆகியவை தீர்ந்து குணமாகும்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மோடி – டிரம்ப் தொலை பேசி உரையா ...

மோடி – டிரம்ப் தொலை பேசி உரையாடல் பிரதமா் நரேந்திரமோடியும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி ...

காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய ...

காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய முதலீடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவ ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவி நீக்கம் செய்ய முடியுமா? திமுகவின் மாஸ்டர் பிளான் திருப்பரங்குன்றம் மலையில், சிக்கந்தர் தர்காவை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள ...

தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது

தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது தவறு இண்டிகோவிடம்தான் உள்ளது என்றும், விரைவில் நிலைமை சீராகிவிடும், ...

இந்தியாவுக்கு மோடி பிரதமராகக் ...

இந்தியாவுக்கு மோடி பிரதமராகக் கிடைத்தது அடித்த அதிர்ஷ்டமே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , பிரதமர் நரேந்திரமோடியின் ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.