குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை தலையிலேயும். உடம்புலேயும்; தேய்க்கக்; தேவையான அளவு சுத்தமான தேங்காயெண்ணையைக் காயவைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய்ப்பால் விடுங்க. அது படபடன்னு கொதிச்சு அடங்கினதும் 1 டீஸ்பூன்; கஸ்தூரி மஞ்சள் பொடியைப் போட்டு இறக்குங்க.

குழந்தைக்கு 1 வயது வரை இந்த எண்ணையைத்தான் தேய்க்கணும். ஆனால் இந்த எண்ணை நல்லாப் போற மாதிரி பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளிப்பாட்டணும். இப்படிச்செய்து வந்தால்; குழந்தைக்கு உடம்பில் சொறி. சிரங்குன்னு எதுவும் வராமல் மேனி பட்டுப்போல் இருக்கும்.

பொதுவா குழந்தைக்கு நாலு வயசாகறவரை தலைக்கு தேங்காயெண்ணை தேய்ச்சுக் குளிப்பாட்டறதுதான் உசிதம். நல்லெண்ணை குளியல் வேண்டாம். முன்னெல்லாம் ஃப்ரெஷ்ஷா தேங்காய்ப்பால் எடுத்து காய்ச்சி எண்ணை எடுத்து குழந்தைக்கு தேய்ச்சுக் குளிப்பாட்டுவோம். இப்பவும் கேரளாவுல அப்படித்தான் செய்யறாங்க. அதான் குழந்தையில் இருந்தே அவங்க சருமமும் தலைமுடியும் பட்டுப்போல இருக்கு.

ஆனா..இந்தக் காலத்துல உடனுக்குடன் எண்ணை எடுக்குறதெல்லாம் நடக்கிற காரியமா? அதுக்குப் பதிலா நல்ல தேங்காயெண்னை ரெண்டு கரண்டி அளவுக்கு எடுத்து. சுட வெச்சு அதுல கால் கரண்டி தேங்காய்ப்பாலும் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளும் போட்டா. தேங்காய்ப்பால் சடசடங்கற கத்தத்தோட முறிஞ்சு ஃப்ரெஷ் தேங்காயெணிணையா கமகமனு மணக்கும். இதை குழந்தையோட தலை. உடம்புனு முழுக்கப்பூசி குளிப்பாட்டினா ஜோரா இருக்கும். எண்ணைப்பசை போக சீயக்காயெல்லாம் போடக்கூடாது.

பாசிப்பயறு அல்லது கடலை மாவு தேய்ச்சுக் குளிப்பாட்டினாலே எண்ணைப்பசை போய்டும். இப்பிடி குளிக்க வெச்சா. குழந்தைக்கு கரப்பான். சொரி சிரங்கு மாதிரியான சரும வியாதிகள் எதுவும் பக்கத்துலயே வராது. வெயில் காலத்துல ஒரு பக்கெட் தண்ணியிலே ஒரு கொத்து வேப்பிலை போட்டு சூரிய வெப்பத்துலே வெச்சு சூடேரினதும் அந்தத் தண்ணியிலே குளிப்பாட்டினா. இன்னும் நல்லது.

Tags; குழந்தையின் சருமம் வளவளப்பாக, குழந்தை அழகாக இருக்க  , குழந்தையின் தோல் மினு மினுக்க,   பச்சிளம் குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...