குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை தலையிலேயும். உடம்புலேயும்; தேய்க்கக்; தேவையான அளவு சுத்தமான தேங்காயெண்ணையைக் காயவைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய்ப்பால் விடுங்க. அது படபடன்னு கொதிச்சு அடங்கினதும் 1 டீஸ்பூன்; கஸ்தூரி மஞ்சள் பொடியைப் போட்டு இறக்குங்க.

குழந்தைக்கு 1 வயது வரை இந்த எண்ணையைத்தான் தேய்க்கணும். ஆனால் இந்த எண்ணை நல்லாப் போற மாதிரி பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளிப்பாட்டணும். இப்படிச்செய்து வந்தால்; குழந்தைக்கு உடம்பில் சொறி. சிரங்குன்னு எதுவும் வராமல் மேனி பட்டுப்போல் இருக்கும்.

பொதுவா குழந்தைக்கு நாலு வயசாகறவரை தலைக்கு தேங்காயெண்ணை தேய்ச்சுக் குளிப்பாட்டறதுதான் உசிதம். நல்லெண்ணை குளியல் வேண்டாம். முன்னெல்லாம் ஃப்ரெஷ்ஷா தேங்காய்ப்பால் எடுத்து காய்ச்சி எண்ணை எடுத்து குழந்தைக்கு தேய்ச்சுக் குளிப்பாட்டுவோம். இப்பவும் கேரளாவுல அப்படித்தான் செய்யறாங்க. அதான் குழந்தையில் இருந்தே அவங்க சருமமும் தலைமுடியும் பட்டுப்போல இருக்கு.

ஆனா..இந்தக் காலத்துல உடனுக்குடன் எண்ணை எடுக்குறதெல்லாம் நடக்கிற காரியமா? அதுக்குப் பதிலா நல்ல தேங்காயெண்னை ரெண்டு கரண்டி அளவுக்கு எடுத்து. சுட வெச்சு அதுல கால் கரண்டி தேங்காய்ப்பாலும் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளும் போட்டா. தேங்காய்ப்பால் சடசடங்கற கத்தத்தோட முறிஞ்சு ஃப்ரெஷ் தேங்காயெணிணையா கமகமனு மணக்கும். இதை குழந்தையோட தலை. உடம்புனு முழுக்கப்பூசி குளிப்பாட்டினா ஜோரா இருக்கும். எண்ணைப்பசை போக சீயக்காயெல்லாம் போடக்கூடாது.

பாசிப்பயறு அல்லது கடலை மாவு தேய்ச்சுக் குளிப்பாட்டினாலே எண்ணைப்பசை போய்டும். இப்பிடி குளிக்க வெச்சா. குழந்தைக்கு கரப்பான். சொரி சிரங்கு மாதிரியான சரும வியாதிகள் எதுவும் பக்கத்துலயே வராது. வெயில் காலத்துல ஒரு பக்கெட் தண்ணியிலே ஒரு கொத்து வேப்பிலை போட்டு சூரிய வெப்பத்துலே வெச்சு சூடேரினதும் அந்தத் தண்ணியிலே குளிப்பாட்டினா. இன்னும் நல்லது.

Tags; குழந்தையின் சருமம் வளவளப்பாக, குழந்தை அழகாக இருக்க  , குழந்தையின் தோல் மினு மினுக்க,   பச்சிளம் குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...