இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது இது.
தாது நஷ்டத்தைப் போக்கி ஆண் தன்மையை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. இந்த இலையைப் பெருந்துண்டுகளாக நறுக்கி இதனுடன் இலவங்கப் பட்டை, ஏலக்காய், மொட்டு நீக்கிய கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு இவைகளுடன் நெய் சேர்த்து விட்டுத் தாளித்து குழம்பு வகைகள் தயாரிப்பார்கள். பதார்த்தங்களுக்கு நறுமணத்தையும் ருசியையும் கொடுப்பதுடன் எளிதில் ஜீரணிக்கவும் செய்யும் தன்மை உடையதாகும்.
இந்த இலையைப் பொன்மேனியாக வறுத்து இடித்து வஷ்திரகாயம் செய்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு வேளைக்கும் பத்து குன்றிமனியளவு கொடுத்து வந்தால் கபத்தைக் கரைக்கும். வயிற்றிலுள்ள புண்ணையும் ஆற்றும்.
You must be logged in to post a comment.
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
2parochial