கைது செய்யப்பட்ட ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வரவேண்டும் என்றும் பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களாகப் பணியாற்றிவந்த 12,000 ஆசிரியர்களை, ஆட்சிக்கு வந்ததும் பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று, தேர்தல்வாக்குறுதி எண் 181ல் கூறி, ஏமாற்றி ஆட்சிக்குவந்த திமுக, இரண்டரை ஆண்டுகள் கடந்த பின்னரும், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆசிரியர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், பொய்யான நம்பிக்கை கொடுத்துவந்த திமுக, தற்போது அறவழியில் போராடிய ஆசிரியர்களை, சமூக விரோதிகளைக் கைது செய்வதைப் போல, அத்து மீறிக் கைது செய்திருக்கிறது. வாக்களித்தமக்களை வஞ்சிப்பது திமுகவுக்கு புதிதல்ல என்றாலும், நாட்டின் எதிர்காலமான மாணவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்கும் அறப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களை, இப்படி தரக்குறைவாக நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
வீண் விளம்பரத்துக்காக, சிலைவைக்கிறோம், பூங்காக்கள் கட்டுகிறோம் என்று கடன் மேல் கடன் வாங்கி, மக்களைக் கடன் காரர்களாக்கியிருக்கும் திமுக, நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் ஆசிரியப்பெருமக்களை அவல நிலையில் தள்ளியிருக்கிறது. உடனடியாக, கைதுசெய்யப்பட்ட ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் விடுதலைசெய்ய வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக் கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வரவேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |