நாட்டின் மலைவாழ் மக்கள் வகுப்பைசேர்ந்த ஒருவர் முதன் முதலாக மிக உயர்ந்து அந்தஸ்து கொண்ட ஜனாதிபதியாக திரவுபதி முர்மு (64) இன்று ( ஜூலை 25) பதவியேற்றார். பார்லி., மையமண்டபத்தில் நடக்கும்விழாவில் தலைமை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்வி., ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்ர். பதவியேற்புக்கு கிளம்பும் முன்னதாக டில்லி ராஜ்காட்காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பார்லி., வளாகத்திற்கு முப்படைதளபதிகள் மற்றும் வீரர்கள் புடைசூழ வரவேற்று அழைத்து செல்லப் பட்டார்.
ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து சமீபத்தில் நடந்த தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட திரவுபதிமுர்மு அமோக வெற்றிபெற்றார். ஒடிசாவில் உள்ள மலைகிராமத்தில் பிறந்த பழங்குடியின பிரிவைசேர்ந்தவர் மொத்தம் 6.76 லட்சம் ஓட்டுகளுடன், அதாவது 64 சதவீத ஓட்டுகள் பெற்று அவர் வென்றார். இதைத் தொடர்ந்து, நாட்டின் 15வது ஜனாதி பதியாக அவர் இன்று பதவியேற்றார்
பார்லிமென்ட் மையமண்டபத்தில் காலை 10:15 மணிக்கு நடக்கும் விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |