உங்களுடன் பேசுவது பெருமையாக இருக்கிறது

இந்தியா 75வது சுதந்திரதினத்தை கொண்டாடும் வேளையில், இந்திய விளையாட்டு வீரர்கள் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளிலும், சர்வதேசசெஸ் ஒலிம்பியாட் தொடரிலும் அபாரமாக விளையாடி பதக்கங்களை குவித்தனர்.

பர்மிங்காமில் நடந்த 22வது காமன் வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி மொத்தமாக 61 பதக்கங்களை இந்தியாவிற்கு குவித்துகொடுத்தனர்.

குறிப்பாக பளுதூக்குதல், பாக்ஸிங், மல்யுத்தம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளில் அபாரமாக விளையாடி பதக்கங்களை குவித்தனர். லான் பௌல்ஸ், தடகளம் ஆகிய விளையாட்டுகளிலும் பதக்கம் வென்றனர். 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றனர்.

இந்நிலையில், காமன்வெல்த்தில் பதக்கம்வென்ற வீரர்கள், வீராங்கனைகளை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுத்து கௌரவப்படுத்தினார் பிரதமர் நரேந்திரமோடி. அந்த விருந்தின் போது விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உங்களது பல்வேறு பணிகளுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கி இந்தவிருந்துக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. உங்களுடன் பேசுவது ஒவ்வொரு இந்தியனுக்கும் எப்படி பெருமையாக இருக்குமோ, அப்படித்தான் எனக்கும் பெருமையாக இருக்கிறது. நாம் அனைவரும் ஒரேகுடும்பம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

நாடு 75வது சுதந்திரதினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில் உங்களது கடின உழைப்பின் மூலம் நாட்டிற்கு பதக்கங்களை வென்றுகொடுத்து பெருமை தேடிதந்திருக்கிறீர்கள். காமன்வெல்த் மற்றும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஆகிய இருபெரும் விளையாட்டு தொடர்களில் நமதுவீரர்கள், வீராங்கனைகள் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தி நாட்டை பெருமைப்பட வைத்திருக்கிறீர்கள்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியா புதிதாக 4 விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்றிருப்பது மகிழ்ச்சி யளிக்கிறது. இது இளம் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம்அளிக்கும் என பிரதமர் மோடி உரையாற்றினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...