உங்களுடன் பேசுவது பெருமையாக இருக்கிறது

இந்தியா 75வது சுதந்திரதினத்தை கொண்டாடும் வேளையில், இந்திய விளையாட்டு வீரர்கள் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளிலும், சர்வதேசசெஸ் ஒலிம்பியாட் தொடரிலும் அபாரமாக விளையாடி பதக்கங்களை குவித்தனர்.

பர்மிங்காமில் நடந்த 22வது காமன் வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி மொத்தமாக 61 பதக்கங்களை இந்தியாவிற்கு குவித்துகொடுத்தனர்.

குறிப்பாக பளுதூக்குதல், பாக்ஸிங், மல்யுத்தம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளில் அபாரமாக விளையாடி பதக்கங்களை குவித்தனர். லான் பௌல்ஸ், தடகளம் ஆகிய விளையாட்டுகளிலும் பதக்கம் வென்றனர். 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றனர்.

இந்நிலையில், காமன்வெல்த்தில் பதக்கம்வென்ற வீரர்கள், வீராங்கனைகளை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுத்து கௌரவப்படுத்தினார் பிரதமர் நரேந்திரமோடி. அந்த விருந்தின் போது விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உங்களது பல்வேறு பணிகளுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கி இந்தவிருந்துக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. உங்களுடன் பேசுவது ஒவ்வொரு இந்தியனுக்கும் எப்படி பெருமையாக இருக்குமோ, அப்படித்தான் எனக்கும் பெருமையாக இருக்கிறது. நாம் அனைவரும் ஒரேகுடும்பம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

நாடு 75வது சுதந்திரதினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில் உங்களது கடின உழைப்பின் மூலம் நாட்டிற்கு பதக்கங்களை வென்றுகொடுத்து பெருமை தேடிதந்திருக்கிறீர்கள். காமன்வெல்த் மற்றும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஆகிய இருபெரும் விளையாட்டு தொடர்களில் நமதுவீரர்கள், வீராங்கனைகள் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தி நாட்டை பெருமைப்பட வைத்திருக்கிறீர்கள்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியா புதிதாக 4 விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்றிருப்பது மகிழ்ச்சி யளிக்கிறது. இது இளம் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம்அளிக்கும் என பிரதமர் மோடி உரையாற்றினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...