ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல என பிரதமர்மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சீனாவின் ஹாங்சு நகரில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டு 4வது சீசன்நடந்தது. 29 தங்கம், 31 வெள்ளி, 51வெண்கலம் என 111 பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்றுசாதனை படைத்தது. இந்நிலையில், டில்லி மேஜர் தியான் சந்த் தேசியமைதானத்தில் ஆசிய பாரா விளையாட்டில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
பின்னர் பிரதமர் மோடி கூறியதாவது: உங்களை (விளையாட்டு வீரர்கள்) சந்திக்கும் வாய்ப்புகள் எனக்கு தொடர்ந்து கிடைத்துவருகிறது. நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் உங்கள் வெற்றியால் பெருமிதம் கொள்கிறார்கள். ஆசியபாரா விளையாட்டில் இந்தியா பெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |