இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

 இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு செழித்துத் தரையோடு தரையாகப் படரும் சிறிய கொடியினத்தை சார்ந்ததாகும் இது. தரைமட்டத்திற்கு மேல் ஓர் அடி வரை வளர்ந்து காணப்படும்.

இந்தச் செடியின் இலைகள் மட்டுமன்றி, வேர் மற்றும் வேர்ப்பட்டை அனைத்துமே மருத்துவ பயன் கொண்டதாகும். இந்தச் செடியின் ஒவ்வொரு பாகமும் கபத்தை அகற்றும் தன்மை கொண்டதாகும்.

அதிகப்படியான கபத்தாலும், ஈளை, இருமல் போன்றவையாலும், பித்த காசம் முற்றிய நிலையில் ஏற்படும் இரத்த வாந்தியாலும் துன்புருபவர்களுக்கு நல்ல மருந்தாகும்.

கிராமப்புறங்களில் இச்செடியின் வேரை இருமல் மட்டுமன்றி இரத்தம் கக்கும் நிலையிலுள்ளவர்களுக்கும் கொடுத்துக் குணமாக்கி விடுகிறார்கள்.

இன்புறா வேரின் மூலம் கபம் சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தி விடலாம். பித்தத்தின் அதிகரிப்பால் ஏற்படும் தொல்லைகளும் குணமாகும். காசநோய், ஈளை, மற்றும் பித்தசுரம், வயிற்றுப் பொருமலுடன் இரைச்சல் போன்றவை குணமாகும்.

இன்புறா இளைச்சாற்றைச் சுரத்தின் கொடுமையால் துன்புருவோரின் உள்ளங்கை, பாதங்கள் முதலிய அவயங்களில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும்.

இந்தச் இலைச் சாற்றுடன் பசுவின் பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கலந்து உட்கொள்ள நெஞ்செரிச்சல் குணமாகும்.

இன்புறா இலைகளுடன் வல்லாரை இலைகளையும் சம அளவில் எடுத்துச் சுத்தம் செய்து ஒன்றாகச் சேர்த்து இட்டு இடித்து ஒரு மண்சட்டியிலிட்டு மூன்று டம்ளர் தண்ணீர் வைத்துக் கொதிக்க வைத்துப் பாதியளவாக வற்ற வைத்துத் தினமும் மூன்று வேளை பருகி வர ஆஷ்துமா, காசநோய், ஈளை, இருமல் இவை குணமாகும்.

இன்புறா வேர்ப்பட்டையை அம்மியில் வைத்துப் பசுவின் பால்விட்டு நன்கு அரைத்து வைத்துக்கொண்டு அதன்பினர் பசும்பாலில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு இதனுடன் போதிய அளவு கற்கண்டையும் சேர்த்துப் பின்னர் சிறிய கடாயில் விட்டுக் கொதிக்க வைக்கும் போது கிண்டிக் கொடுக்க வேண்டும்.

இவ்விதம் செய்தால் லேகியப் பதத்தை அடையும். இந்த லேகியத்தைத் தினமும் இரண்டு வேளை உட்கொண்டால் வாந்தி, இருமல், காசநோய் போன்றவை குணமாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...