காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளது

காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளதால், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: டிஜிபி., அறிவிப்பை வரவேற்கிறேன். சொல்வதோடு நிறுத்தாமல் குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பா.ஜ., தொண்டர்கள் அமைதிகாக்க வேண்டும். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப் படுவார்கள் என நம்புகிறோம்.

தமிழக போலீஸ் கைகள் கட்டப் பட்டுள்ளன. இதனால், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. இதனை பலமுறை கூறி வருகிறோம். அதுன் உச்சம்தான் தற்போது தொட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பா.ஜ., தொண்டர்களுக்கு உதவுவோம். தாக்குதல் நடத்துவதால், பாஜ.,வின் வளர்ச்சியை தடுக்கமுடியாது. இதே சூழ்நிலை தொடர்ந்தால், தொண்டர்களின் கோபத்திற்கு மாநில அரசு ஆளாகும் என எச்சரித்து கொள்கிறேன்.
மாநில அரசு இன்னும் ஆக்ரோஷமாக நடவடிக்கை எடுக்கவேண்டும். குண்டுவீச்சு சம்பவத்தில் தொடர்புள்ளவர்களை விரைவில் கைதுசெய்ய வேண்டும். பெட்ரோல் குண்டுவீச்சு குறித்து முன்கூட்டியே எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆரம்பத்தில் போலீசார் சுணக்கமாக செயல்பட்டாலும், தற்போது வரைவாக செயல்படுகின்றனர்.

பா.ஜ.வினரை உளவுத் துறையினர் உன்னிப்பாக கவனிக்கின்றனர். அண்ணாமலை என்ன செய்கிறார். என்ன சாப்பிடுகிறார் என கண்காணிப்பவர்கள், கலவரம் செய்பவர் களை கண்காணிப்பதில் என்ன பிரச்னை. பா.ஜ., தொண்டர்களை கைதுசெய்யும் அளவிற்கு என்ன கோபம். மாநில அரசிற்கு எச்சரிக்கும் விதமாக நாளை கோவையில் போராட்டம் நடக்க உள்ளது. புகார்மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படுகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...