முயற்சியின் அளவே தியானம்

 சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி என்றால் யோக நூல்களைப் படிப்பது என்று பொருள் அல்ல. அது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியதாகும்.

 

விதைகளை நசுக்கினால் தான் எண்ணெய் எடுக்க முடியும். கற்களைச் செதுக்கினால்தான் சிலையாக்க முடியும். அதைப் போல இறைவனை நினைத்து, யோக நூல்கள் கூறும் ஒழுக்க நெறிகளையும், பயிற்சிகளையும் கடைபிடித்தால்தான் ஆன்மீக ஒளி மனதில் தோன்றும்.

இளையவரும், முதியவரும், உடல்நலம் இல்லாதவறும், ஊனமுற்றவரும் கூட தொடர்ந்து நீடித்த பயிற்சியால் தியானத்தில் வெற்றிபெற இயலும் என்று விதரயோக பரதீபிகை கூறுகிறது. பயிற்சி செய்பவனுக்கு உயிர்ச்சி கிட்டும்.

யோக நூல்களைப் படிப்பதால் மட்டும் தியானத்தில் வெற்றி கிட்டாது. யோக முறைகளைத் தொடர்ந்து பயிற்சி செய்தால் தான் தியானத்தில் வெற்றிபெற முடியும்.

முயற்சியும் பயிற்சியும் இடைவிடாத சாதனையுமே தியானத்தில் ஒருவரை நிலைபெற வைக்க இயலும். சந்நியாசியைப் போல் உடுத்துவதாலோ, பேசுவதாலோ தியானத்தில் வெற்றி பெற முடியாது.

புலன் வழி இன்பங்களைவிட புலன்கள் வலிமையானவை. புலன்களைவிட மனம் வலிமையானது. மனதைவிட புத்தி வலிமையானது. புத்தியைவிட ஆன்மா வலிமையானது. ஆசையை சீரமைத்தால் ஆன்மாவை உணரலாம். இந்த நிலையை அடையத் தொடர்ந்து பயிற்சிதான் தேவை.

விதை நிலம், எரு, தண்ணீர், காவல் இவைகள் அனைத்தும் சரியாக இருந்தால் தான் விளைவு நன்றாக இருக்கும். அதுபோல ஒரு குரு அத்வைத தத்துவம் என்ற ஒருமைத் தத்துவ விதையை உள் அறிவு என்றும், நிலத்தில் ஊன்றினால் அது வளர்ச்சிப் பெற, ஒழுக்கம் என்ற உரமிட வேண்டும். அறிவை ஒன்றிப் பழகும் ஒருமை பழக்கமான தியானமும், ஆராய்ச்சி என்ற தண்ணீரும் பாய்ச்ச வேண்டும். அறிவை ஒன்றச் செய்து உறுதியான அசைவற்ற நிலையடைவதே தியானத்திற்குத் தேவையாக இருக்கிறது.

ஆகையால், அறிவு சலனப்பட்டுக் காம, குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறு குணங்களில் எதுவாயினும் பார்த்துக் கொள்ளும் விழிப்பு நிலையாகிய காவல் புரிய வேண்டும்.

இவையனைத்தும் முயற்சிக்கும் பயிற்சிக்கும் ஏற்றபடி தியானம் என்ற விளைவு உண்டாகும்.

முயற்சிச் சிறகுகளை முடிவில்லாமல் அசைத்துக் கொண்டிருக்கும்போது, முடியாதது எதுவுமில்லை.

முயற்சி என்பது முன்னேறத் துடிப்பவர்களின் மந்திர சொல். முயற்சியே வெற்றிக்கு நீ இடும் மூலதனம், முயற்சியும் பயிற்சியும் தான் சாதாரண மனிதனை மாமனிதனாக சாதனையாளனாக உயர்த்துகிறது.

ஒரு முத்துச் சிப்பி மழைத்துளியை மெதுவாக நல் முத்தாக மாற்றுகிறது. அதற்கு குறைந்தபட்சம் ஏழு வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. அந்த முத்துச் சிப்பியைப்போலவே நாமும் பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் தியானத்தைப் பழக வேண்டும். சிறிது கடினம் தான். சோதனைகள் வரலாம். சோதனைகளைச் சாதனையாக்கலாம்.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...