தீண்டாமைக்கு எதிராக போராடியவர் சுவாமி தயானந்த சரஸ்வதி

தீண்டாமைக்கு எதிராக போராடியவர் சுவாமி தயானந்த சரஸ்வதி என பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டினார்.

குஜாரத்தின் மோர்பி மாவட்டம், தன்காராவில் கடந்த 1824-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம்தேதி சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்தார். ஆரிய சமாஜத்தை தோற்றுவித்த அவர் சமூக சீர்திருத்தவாதி ஆவார். அவரதுகாலத்தில் நிலவிய சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து தீவிரமாகப் போராடினார். சமூக சீர்திருத்தங்கள், பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். அவரது 200-வது பிறந்த தின விழா டெல்லியில் உள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது.

சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது ஆண்டு பிறந்தவிழா அடுத்த 2 ஆண்டுகளுக்கு கொண்டாடப்படும். அவர் வாழ்ந்த காலத்தில் இந்தியா அடிமைத் தனத்தில் இருந்தது. அந்த நேரத்தில் இந்தியாவின் லட்சியங்கள், கலாச்சாரத்தை பாதுகாக்க அவர் முயற்சி மேற்கொண்டார். வேதங்கள்மீது தவறான விளக்கம் அளிக்கப் பட்டது. அப்போது ஒரு மீட்பராக அவர் உருவெடுத்தார்.

சமூக பாகுபாடு, தீண்டாமை போன்ற அவலங்களுக்கு எதிராக அவர் பிரச்சாரம்செய்தார். குறிப்பாக, தீண்டாமைக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். இதை தேசத்தந்தை காந்தியடிகளே பாராட்டினார்.

பெண்களுக்கு எதிரான பாகு பாட்டை சுவாமி தயானந்த சரஸ்வதி மிக கடுமையாக எதிர்த்தார். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பே பெண் கல்வி, பெண் சமஉரிமையை வலியுறுத்தி அவர் பிரச்சாரம் செய்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தஅமுத காலத்தில் சுவாமியின் 200-வது பிறந்த ஆண்டு விழாவை கொண்டா டுவது நாட்டுக்கு உத்வேகம் அளிக்கிறது.

‘வேதங்களுக்குத் திரும்புவோம்’ என்று அவர் அழைப்பு விடுத்தார். இதையேற்று அவரது வழியில் மக்கள் நடக்கின்றனர். நவீனத்து வத்தின் பாதையில் செல்லும் அதேவேளையில் மரபுகள், கலாச் சாரத்தையும் இந்திய மக்கள் பாதுகாக்கின்றனர்.

தத்துவம், யோகா, கணிதம், கொள்கை, ராஜதந்திரம், அறிவியல்மற்றும் மருத்துவ அறிவியல் ஆகியதுறைகளில் இந்திய ஞானிகளின் பங்களிப்பு அளப்பரியது. அந்தவகையில் நமது நாட்டின் பழமையான பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் சுவாமி தயானந்தசரஸ்வதி பெரும் பங்கு வகித்தார். கடந்த 2001-ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது சமூக சேவை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அவரது அமைப்பின் அறக்கட்டளை மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியது.

சுவாமி தயானந்த சரஸ்வதி காட்டியவழியில் நாம் நடக்கிறோம். ஒடுக்கப் பட்டோர், ஏழைகள், பிற்படுத்தப் பட்டோரின் நலனில் அரசு அதிக அக்கறை செலுத்துகிறது. மக்களின் வீட்டு வசதி, மருத்துவ சிகிச்சை மற்றும் மகளிருக்கு அதிகாரம் அளித்தல் ஆகிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை அமல் செய்யப் பட்டிருக்கிறது.

ஜி20 அமைப்பின் தலைமைபொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. இந்தநேரத்தில் பழங்கால ஞானத்தின் அடித்தளத்துடன் நவீன லட்சியங்களை ஊக்குவிக்க ஆர்யசமாஜ் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கவேண்டும். இயற்கை விவசாயம், சிறுதானியங்கள் பயன் பாட்டை ஊக்குவிக்க பிரச்சாரம் செய்ய வேண்டும்.

லோகமான்ய திலகர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், வீர சாவர்க்கர், லாலா லஜபதிராய், லாலா ஹர்தயாள், சந்திரசேகர் ஆசாத், ராம் பிரசாத் பிஸ்மில் உட்பட எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள், தயானந்த சரஸ் வதியிடம் இருந்து உத்வேகம் பெற்றனர்.

இவ்வாறு பிரதமர் நரேந்திரமோடி பேசினார். 150 ஆண்டுக்கு முன்பே பெண்கல்வி, பெண் சமஉரிமை குறித்து பிரச்சாரம் செய்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...