நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், மதுரை மற்றும் நத்தம் இடையே 7.3 கிமீ தொலைவிலான மேம்பாலத்தை, இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.
மேலும், தேசிய நெடுஞ்சாலை NH 785 ல் 24.4 கிமீ தொலைவிலான நான்குவழிச் சாலைப் பணிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை NH 744 ல் புதிய சாலைத் திட்டப்பணிகள் ஆகிய ₹3700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
அதனுடன், திருத்துறைப்பூண்டி மற்றும் அகஸ்தியம்பள்ளி இடையே ₹294 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட 37 கிமீ தொலைவிலான புதிய பாதை விரிவாக்கத்தில் ரயில் சேவையையும், தாம்பரம் மற்றும் செங்கோட்டை இடையேயான விரைவு ரயில் சேவையையும் மாண்புமிகு பிரதமர் தொடங்கி வைத்தார்.
கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்தின் உட்கட்டமைப்பை உயர்த்தவும், தமிழ் மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் முன்னேறவும், மத்திய அரசின் பங்களிப்பு குறித்தும் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் எடுத்துரைத்தார்.
மாநில தலைவர் அண்ணாமலை
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |