அதிகாரிகளை பலிக்கடாவாகும் தி.மு.க. அரசு -ப.ஜ.க. மூத்த தலைவர் ஹெச். ராஜா

கடலுார்: திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், பா.ஜ.க  மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கோவிலை கொள்ளையடிப்பதை தவிர, இந்த அரசு ஒன்றும் செய்யவில்லை. கள்ளச் சாராயத்தால் மரணங்கள் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

சேலத்தில் அ.தி.மு.க., பிரமுகரை, தி.மு.க., பெண் கவுன்சிலரின் கணவர் கொலை செய்துஉள்ளார். தமிழகம் முழுதும் கூலிப்படையினர் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர்.

திருமாவளவனுக்கு முதுகெலும்பு இருந்தால், முதல்வர் ஸ்டாலின் வீட்டின் முன் வந்து போராட்டம் நடத்த வேண்டும். 60க்கும் மேற்பட்டோர் கள்ளச் சாராயத்துக்கு பலியாகி உள்ளனர். அதற்காக ஏன் அவர் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை?

போதைப்பொருள் கடத்திய ஜாபர் சாதிக், அ.தி.மு.க., பிரமுகரை கொலை செய்த தி.மு.க., கவுன்சிலரின் கணவர், விஷச் சாராய ஊறல் போட்டவர்களை பிடிக்க சென்றால், அங்கு ஸ்டாலின் போட்டோ ஒட்டியுள்ளது.

சட்ட விரோத தீய சக்திகளின் கூடாரமாக தி.மு.க., உள்ளது. அரசு அதிகாரிகளை பலிகடா ஆக்கிவிட்டு, கட்சிக்காரர்களை காப்பாற்றுகிறது தி.மு.க., அரசு. கட்சியும், அரசும் முதல்வர் கட்டுப்பாட்டில் இல்லை. முதல்வர் துாங்கிக் கொண்டிருக்கிறார்.

எனவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.,விற்கு மக்கள் கண்டிப்பாக பாடம் புகட்டுவர். தி.மு.க., – அ.தி.மு.க.,விற்கு மாற்று கட்சி பா.ஜ., என, ஓட்டு சதவீதத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து பா.ஜ., போட்டியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...