அதிகாரிகளை பலிக்கடாவாகும் தி.மு.க. அரசு -ப.ஜ.க. மூத்த தலைவர் ஹெச். ராஜா

கடலுார்: திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், பா.ஜ.க  மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கோவிலை கொள்ளையடிப்பதை தவிர, இந்த அரசு ஒன்றும் செய்யவில்லை. கள்ளச் சாராயத்தால் மரணங்கள் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

சேலத்தில் அ.தி.மு.க., பிரமுகரை, தி.மு.க., பெண் கவுன்சிலரின் கணவர் கொலை செய்துஉள்ளார். தமிழகம் முழுதும் கூலிப்படையினர் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர்.

திருமாவளவனுக்கு முதுகெலும்பு இருந்தால், முதல்வர் ஸ்டாலின் வீட்டின் முன் வந்து போராட்டம் நடத்த வேண்டும். 60க்கும் மேற்பட்டோர் கள்ளச் சாராயத்துக்கு பலியாகி உள்ளனர். அதற்காக ஏன் அவர் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை?

போதைப்பொருள் கடத்திய ஜாபர் சாதிக், அ.தி.மு.க., பிரமுகரை கொலை செய்த தி.மு.க., கவுன்சிலரின் கணவர், விஷச் சாராய ஊறல் போட்டவர்களை பிடிக்க சென்றால், அங்கு ஸ்டாலின் போட்டோ ஒட்டியுள்ளது.

சட்ட விரோத தீய சக்திகளின் கூடாரமாக தி.மு.க., உள்ளது. அரசு அதிகாரிகளை பலிகடா ஆக்கிவிட்டு, கட்சிக்காரர்களை காப்பாற்றுகிறது தி.மு.க., அரசு. கட்சியும், அரசும் முதல்வர் கட்டுப்பாட்டில் இல்லை. முதல்வர் துாங்கிக் கொண்டிருக்கிறார்.

எனவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.,விற்கு மக்கள் கண்டிப்பாக பாடம் புகட்டுவர். தி.மு.க., – அ.தி.மு.க.,விற்கு மாற்று கட்சி பா.ஜ., என, ஓட்டு சதவீதத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து பா.ஜ., போட்டியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஹரியானா தேர்தலில் மக்களுக்கு ப ...

ஹரியானா தேர்தலில் மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் ஹரியானா தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள் அதிகம் பேர் ...

மஹாராஷ்டிராவில் ரூ 50,000 கோடி திட் ...

மஹாராஷ்டிராவில் ரூ 50,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் மஹாராஷ்டிராவின் வாஷிம், மும்பை மற்றும் தானேயில் ரூ.50 ஆயிரம் ...

3-வது கௌடில்யா மாநாட்டில் பிரதம ...

3-வது கௌடில்யா மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரை புதுதில்லியில் இன்று (04.10.2024) நடைபெற்ற கௌடில்யா பொருளாதார மாநாட்டில் ...

இளைஞர்களை இருண்ட உலகத்திற்கு க ...

இளைஞர்களை இருண்ட உலகத்திற்கு காங்கிரஸ் அழைக்கிறது -அமித்ஷா குற்றம் சாடியுள்ளார் இளைஞர்களை போதைப்பொருட்களின் இருண்ட உலகத்திற்கு காங்கிரஸ் அழைத்து செல்ல ...

சாலைகளை தூய்மையாக வைத்திருக்க ...

சாலைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் -நிதின் கட்கரி “யாராவது பான் மசாலா சாப்பிட்டுவிட்டு சாலையில் துப்புவதை பார்த்தால், ...

மேற்காசியா போர் பதற்றம் அதிகரி ...

மேற்காசியா போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்காசியா போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இன்று பாதுகாப்பு ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...