தந்தையின் பேச்சைக் கேட்காத தமிழக முதல்வர் – ஹெட்ச். ராஜா விமர்சனம்

ஒரே நாடு ஒரே தேர்தலை முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆதரித்திருப்பதாகக் குறிப்பிட்டு முதல்வரை ஹெச். ராஜா விமர்சித்துள்ளார்.

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ஹெச். ராஜா காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில்,

“இந்துக்களின் ரூ. 1,185 கோடி நன்கொடையில்தான் கோயில்களின் கும்பாபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், முதல்வரின் வழிகாட்டுதலின்படி, பக்தர்களின் நன்கொடையில் கோயில்களில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்படுவதாய் அமைச்சர் கூறுகிறார்.

தங்கள் பக்தியின் காரணமாக அவரவர் கும்பாபிஷேகம் நடத்தினால், அதையும் அறநிலையத்துறை தட்டி பறிக்குமா? அறநிலையத்துறை எதற்காக உள்ளது? தமிழ்நாட்டில் இந்து விரோத அரசுதான் நடக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தலை ஆதரிப்பதாக முதல்வரின் தந்தையே நெஞ்சுக்கு நீதியில் கூறியுள்ளார். தந்தையின் பேச்சை மதிக்காத பிள்ளை, என்ன பிள்ளை?

ஒன்றரை மாதத்திற்கு முன்னரே, சென்னை மட்டுமில்லாமல் மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட மற்ற மாவட்டங்கள் மீதும் கவனம் செலுத்துமாறு கூறியிருந்தேன். ஆனால், தற்போது விழுப்புரம், திண்டிவனம், கிருஷ்ணகிரி, டெல்டா மாவட்டங்கள் வரையில் சேதத்திற்கு ஆளாகியுள்ளன’’ என்று கூறினார்.

அதுமட்டுமின்றி, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆதரவு தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு, அதைப் பற்றி அதிகம் பேச வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு, மறைந்த அவரது தந்தை கருணாநிதி கடிதம் எழுதுவதுபோல சித்திரிப்பு பதிவையும், ஹெச். ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.