தந்தையின் பேச்சைக் கேட்காத தமிழக முதல்வர் – ஹெட்ச். ராஜா விமர்சனம்

ஒரே நாடு ஒரே தேர்தலை முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆதரித்திருப்பதாகக் குறிப்பிட்டு முதல்வரை ஹெச். ராஜா விமர்சித்துள்ளார்.

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ஹெச். ராஜா காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில்,

“இந்துக்களின் ரூ. 1,185 கோடி நன்கொடையில்தான் கோயில்களின் கும்பாபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், முதல்வரின் வழிகாட்டுதலின்படி, பக்தர்களின் நன்கொடையில் கோயில்களில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்படுவதாய் அமைச்சர் கூறுகிறார்.

தங்கள் பக்தியின் காரணமாக அவரவர் கும்பாபிஷேகம் நடத்தினால், அதையும் அறநிலையத்துறை தட்டி பறிக்குமா? அறநிலையத்துறை எதற்காக உள்ளது? தமிழ்நாட்டில் இந்து விரோத அரசுதான் நடக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தலை ஆதரிப்பதாக முதல்வரின் தந்தையே நெஞ்சுக்கு நீதியில் கூறியுள்ளார். தந்தையின் பேச்சை மதிக்காத பிள்ளை, என்ன பிள்ளை?

ஒன்றரை மாதத்திற்கு முன்னரே, சென்னை மட்டுமில்லாமல் மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட மற்ற மாவட்டங்கள் மீதும் கவனம் செலுத்துமாறு கூறியிருந்தேன். ஆனால், தற்போது விழுப்புரம், திண்டிவனம், கிருஷ்ணகிரி, டெல்டா மாவட்டங்கள் வரையில் சேதத்திற்கு ஆளாகியுள்ளன’’ என்று கூறினார்.

அதுமட்டுமின்றி, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆதரவு தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு, அதைப் பற்றி அதிகம் பேச வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு, மறைந்த அவரது தந்தை கருணாநிதி கடிதம் எழுதுவதுபோல சித்திரிப்பு பதிவையும், ஹெச். ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...