ப.ஜ.க.,கோரிக்கை நிறைவேறுமா? தமிழக அரசுக்கு அமித் ஷா கடிதம்

திருச்சியில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:

கடந்த 2019ம் ஆண்டு, சிறு, குறு விவசாயிகள் நலனுக்காக, பி.எம்., கிசான் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார். தமிழகத்தில், அதிகபட்சமாக 43 லட்சம் விவசாயிகள், அந்தத் திட்டத்தில் பயன்பெற பதிவு செய்தனர்.

படிப்படியாக குறைந்து, தற்போது இந்தத் திட்டத்தில், 21 லட்சம் விவசாயிகள் மட்டுமே பயனடைகின்றனர். 39 லட்சம் சிறு, குறு விவசாயிகள் உள்ள தமிழகத்தில், தகுதியான விவசாயிகளை நீக்கி, மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கலெக்டர்களும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்தி, தகுதியான விவசாயிகளை பி.எம்., கிசான் திட்டத்தில் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால், திருச்சியை மையமாகக் கொண்டு, பா.ஜ., மாநில பொதுச்செயலர் முருகானந்தம் தலைமையில் போராட்டம் நடத்தப்படும்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், குற்றவாளிகள் தொடர்பான வீடியோ வெளியிட்டுள்ள தமிழக அரசு, தொடர்ந்து உண்மையை மூடி மறைக்கிறது. கொலை சம்பவத்தில் உள்ள மர்ம முடிச்சை அவிழ்ப்பதற்கு, போலீசாரோ, தமிழக அரசோ முயற்சி செய்யவில்லை.

ஆம்ஸ்ட்ராங் கொலையை சி.பி.ஐ., விசாரணைக்கு விட வேண்டும் என தமிழக பா.ஜ., சார்பில் அமித் ஷாவுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினோம். அதன் அடிப்படையில், தமிழக உள்துறை செயலரிடம் விளக்கம் கேட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழக விவசாயிகளுக்கு காவிரி நீரை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி, விவசாய சங்கத்தினர் வரும் 26ல் போராட்டம் நடத்துகின்றனர். அப்போராட்டத்தில் பா.ஜ.,வும் பங்கேற்கும். காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தில், அனைத்து மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், துறை சார்ந்த அதிகாரிகளும் உறுப்பினர்களாக உள்ளனர். மேலாண்மை ஆணையம் நடத்தும் கூட்டங்களை, தமிழக அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். அதனால், நதிநீர் பங்கீடு பிரச்னைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு, அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...