தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்

‘பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி’ எனப்படும், விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் நிதி டிபாசிட் செய்யப்படும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், அதிகபட்சமாக, 3.24 லட்சம் விவசாயிகள் நிதி உதவி பெற்றுள்ளனர்.

கடந்த 2019 பிப்ரவரியில், ‘பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி’ என்ற பெயரில் விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் உதவித் தொகை டிபாசிட் செய்யப்படும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் இத்திட்டம் தீட்டப்பட்டு அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், மூன்று தவணைகளில் மொத்தம் 6,000 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இந்த தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.வங்கி பரிவர்த்தனை வாயிலாக, விவசாயிகளுக்கு பணம் வரவு செய்யப்படும் உலகிலேயே மிகப்பெரிய திட்டமாக இது திகழ்கிறது.

பயனைடையும் விவசாயிகளின் விபரங்கள், மிகவும் வெளிப்படையாக இருக்கும் வகையிலும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதுவரை நாடு முழுதும் உள்ள 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு, 17 தவணைகளில் 3.24 லட்சம் கோடி ரூபாய் வரை வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்ட வரையறைகளின்படி தகுதி வாய்ந்த பயனாளிகளை கண்டறிய வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு.தகுதி வாய்ந்த விவசாயிகள் யாரும் விடுபட்டு போய் விடக் கூடாது என்பதை, உறுதி செய்வதற்காக தேசிய அளவிலான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

‘விக் ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ பிரசாரத்தின் வாயிலாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.விவசாயிகளின் தகவல்களை பதிவு செய்வதற்காக நாடு முழுதும், ஐந்து லட்சம் பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டு வீடுகளுக்கே நேரடியாக சென்று விவசாயிகள் பற்றிய விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

கடந்த ஜூலை 31 நிலவரப்படி தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ், 46 லட்சத்து 76 ஆயிரத்து 80 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். இவர்களது வங்கிக் கணக்கில் மொத்தம் 10,900 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.புதுச்சேரியில் 11,399 விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். இவர்களது வங்கிக் கணக்கில், 32.35 கோடி ரூபாய் வரையில் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய விவசாயத்துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலேயே அதிகபட்ச பயனாளிகளாக, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, 3 லட்சத்து 24 ஆயிரத்து 51 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...