அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

 இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை உடையது. இதன் வேரைக் கஷாயமாக உண்டால், வறட்சியை அகற்றும், உள்ளழலாற்றும், கோழையை அகற்றும் மலத்தை இளக்கும்; உடலுக்கு நன்மை பயக்கும்.

 

தேக அனல் தணிய, அதிமதுரம் 15 கிராம் எடுத்து வெந்நீரில் அரைத்துக் கலக்கி வடி கட்டிக் காலை, மாலை கொடுக்கவும்.

மஞ்சள் காமாலைக்கு

அதிமதுரம், முட்சங்கன் வேர்ப்பட்டை இந்த இரண்டையும் சம பங்கு எடுத்து, எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து மூன்று நாட்கள் தேக்காங் கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக்கொண்டு பாலில் ஒரு நாளைக்கு இரண்டு தடவை கொடுத்தால் குணம் ஆகும்.

சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு

அதிமதுரம் கடுக்காய், மிளகும் இவை சமனெடை எடுத்து இளம் பதமாய் வறுத்து சூரணம் செய்து 3 கிராம் முதல் 5 கிராம் வரை தேனில் கலந்து கொடுக்கக் குணமாகும்.

கர்ப்பவதிகளுக்கு காணும் உதிரம் நிற்க

அதிமதுரம், சீரகம் வகைக்கு 10 கிராம் சேர்த்து, இடித்து 250 மில்லி, நீர்விட்டு 125 மி.லி. ஆகக் காய்ச்சி காலை, மாலை இரு வேளையும் 3 அல்லது 4 நாட்கள் கொடுக்க தீரும்.

பேதியாக வேண்டும் என்றால்

அதிமதுரம் 100 கிராம் காய்ந்த திராட்சை, உப்பு, 200 கிராம் ஒன்றாகச் சேர்த்து ½ லிட்டர் தண்ணீரில் 125மி.லி. ஆகச் சுண்ட வைத்துக் கொடுக்க இரண்டு முறை பேதியாகும். நிறுத்த மோர் குடிக்கவும்.

இதன் இலையை அரைத்துப் பூசி வர, உடலிலும், அக்குளிலும் உண்டாகும் துர்வாசனை, அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும்.

வாயுபிடிப்பு, சுளுக்கு உண்டானால், சிற்றாமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்) தடவி குன்றி இலையை அதன்மேல் ஒட்டவைக்க குணமாகும். அப்போது ஒருவித விறுவிறுப்பு உண்டாகி வலி குணமாகும்.

அதிமதுர சூரணம்

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம், கொடி வேலி வேர் பட்டை 20 கிராம், இவைகளைச் சூரணம் செய்து சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை 3 கிராம் வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர பொதுவாக நோய் வராது, தலைவலி, ஒற்றைத் தலைவலி, தீராத தலைவலி தீரும், சுரம் தீரும், கண் ஒளி பெரும். ஒரு சிறு அதி மதுரத் துண்டை ஒன்று வாயில் போட்டுச் சுவைத்து இரசத்தை விழுங்க, உடல் வறட்சி, இருமல் தணியும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...