உடல் உறுப்பு தானம் என்பது மனித இயல்பின் மிக உயர்ந்த தார்மீக எடுத்துக்காட்டாகும் -திரௌபதி முர்மூ

உடல் உறுப்பு தானத்தின் ஆழமான முக்கியத்துவத்தை எடுத்துரைத்த குடியரசு துணைத்தலைவர் திரு தன்கர், இது “ஒரு  ஆன்மீக நடவடிக்கையும் மனித இயல்பின் மிக உயர்ந்த தார்மீக எடுத்துக்காட்டும் ஆகும் ” என்றார். உடல் உறுப்பு தானம் என்பது உடல் ரீதியான தாராள மனப்பான்மைக்கு அப்பாற்பட்டது, இது கருணை மற்றும் தன்னலமற்ற தன்மையின் ஆழமான நற்பண்புகளைப் பிரதிபலிக்கிறது என்பதை  வலியுறுத்தினார்.

ஜெய்ப்பூரில் உடல் தானம் செய்தவர்களின் குடும்பங்களை கௌரவிக்கும் வகையில் ஜெயின் சமூக குழுக்களின் மத்திய அமைப்பும் தில்லியின் உடல் உறுப்பு தான சங்கமும்  ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், உடல் உறுப்பு தானம் குறித்து குடிமக்கள் உணர்வுபூர்வ  முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதை மனிதகுலத்திற்கு சேவை செய்யும் உன்னத பாரம்பரியத்துடன் ஒத்துப்போகும் ஒரு இயக்கமாக மாற்ற வண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உலக உறுப்பு தான தினத்தின் மையக்கருத்தான “இன்று ஒருவரின் புன்னகைக்கு காரணமாக இருங்கள்” என்பதை எடுத்துரைத்த திரு தன்கர், உடல் உறுப்பு தானம் என்ற உன்னத நோக்கத்திற்காக ஒவ்வொருவரும் தனிப்பட்ட மற்றும் குடும்ப அர்ப்பணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.

உடல் உறுப்பு தானத்தில் ‘வர்த்தகமயமாதல்’ அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த திரு தன்கர், உடல் உறுபபுகளை சமுதாயத்திற்காக சிந்தித்து தானம் செய்ய வேண்டுமே தவிர, நிதி ஆதாயத்துக்காக அல்ல என்றார்.  மருத்துவத் தொழிலை ஒரு “தெய்வீகத் தொழில்” என்று குறிப்பிட்டு, கொவிட் தொற்றுநோயின் போது ‘சுகாதார வீரர்களின்’ தன்னலமற்ற சேவையை எடுத்துரைத்தார், மருத்துவத் தொழிலில் உள்ள ஒரு சில நபர்கள் உறுப்பு தானத்தின் உன்னத தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். உடல் உறுப்பு தானம் என்பது தந்திரமான சக்திகளின் வணிக ஆதாயத்திற்காக பாதிக்கப்படக்கூடியவர்களின் சுரண்டல் துறையாக இருப்பதை நாம் அனுமதிக்க முடியாது” என்று அவர் கூறினார்.

தன்னலமற்ற சேவை மற்றும் தியாகத்தின் உதாரணங்கள் நிறைந்த இந்தியாவின் வளமான கலாச்சார, வரலாற்று பாரம்பரியத்தை அங்கீகரித்த அவர், அறிவு மற்றும் வழிகாட்டுதலின் பரந்த களஞ்சியமாக செயல்படும் நமது புனித நூல்களிலும் வேதங்களிலும் பொதிந்துள்ள ஞானத்தை ஒவ்வொருவரும் பிரதிபலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...