உடல் உறுப்பு தானம் என்பது மனித இயல்பின் மிக உயர்ந்த தார்மீக எடுத்துக்காட்டாகும் -திரௌபதி முர்மூ

உடல் உறுப்பு தானத்தின் ஆழமான முக்கியத்துவத்தை எடுத்துரைத்த குடியரசு துணைத்தலைவர் திரு தன்கர், இது “ஒரு  ஆன்மீக நடவடிக்கையும் மனித இயல்பின் மிக உயர்ந்த தார்மீக எடுத்துக்காட்டும் ஆகும் ” என்றார். உடல் உறுப்பு தானம் என்பது உடல் ரீதியான தாராள மனப்பான்மைக்கு அப்பாற்பட்டது, இது கருணை மற்றும் தன்னலமற்ற தன்மையின் ஆழமான நற்பண்புகளைப் பிரதிபலிக்கிறது என்பதை  வலியுறுத்தினார்.

ஜெய்ப்பூரில் உடல் தானம் செய்தவர்களின் குடும்பங்களை கௌரவிக்கும் வகையில் ஜெயின் சமூக குழுக்களின் மத்திய அமைப்பும் தில்லியின் உடல் உறுப்பு தான சங்கமும்  ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், உடல் உறுப்பு தானம் குறித்து குடிமக்கள் உணர்வுபூர்வ  முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதை மனிதகுலத்திற்கு சேவை செய்யும் உன்னத பாரம்பரியத்துடன் ஒத்துப்போகும் ஒரு இயக்கமாக மாற்ற வண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உலக உறுப்பு தான தினத்தின் மையக்கருத்தான “இன்று ஒருவரின் புன்னகைக்கு காரணமாக இருங்கள்” என்பதை எடுத்துரைத்த திரு தன்கர், உடல் உறுப்பு தானம் என்ற உன்னத நோக்கத்திற்காக ஒவ்வொருவரும் தனிப்பட்ட மற்றும் குடும்ப அர்ப்பணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.

உடல் உறுப்பு தானத்தில் ‘வர்த்தகமயமாதல்’ அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த திரு தன்கர், உடல் உறுபபுகளை சமுதாயத்திற்காக சிந்தித்து தானம் செய்ய வேண்டுமே தவிர, நிதி ஆதாயத்துக்காக அல்ல என்றார்.  மருத்துவத் தொழிலை ஒரு “தெய்வீகத் தொழில்” என்று குறிப்பிட்டு, கொவிட் தொற்றுநோயின் போது ‘சுகாதார வீரர்களின்’ தன்னலமற்ற சேவையை எடுத்துரைத்தார், மருத்துவத் தொழிலில் உள்ள ஒரு சில நபர்கள் உறுப்பு தானத்தின் உன்னத தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். உடல் உறுப்பு தானம் என்பது தந்திரமான சக்திகளின் வணிக ஆதாயத்திற்காக பாதிக்கப்படக்கூடியவர்களின் சுரண்டல் துறையாக இருப்பதை நாம் அனுமதிக்க முடியாது” என்று அவர் கூறினார்.

தன்னலமற்ற சேவை மற்றும் தியாகத்தின் உதாரணங்கள் நிறைந்த இந்தியாவின் வளமான கலாச்சார, வரலாற்று பாரம்பரியத்தை அங்கீகரித்த அவர், அறிவு மற்றும் வழிகாட்டுதலின் பரந்த களஞ்சியமாக செயல்படும் நமது புனித நூல்களிலும் வேதங்களிலும் பொதிந்துள்ள ஞானத்தை ஒவ்வொருவரும் பிரதிபலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...