தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய கொண்டாட்டத்திற்கு மன்சூக் மண்டொலியாவிற்கு அழைப்பு

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு அனைத்து மக்களும் குறைந்தது ஒரு மணி நேரமாவது வெளிப்புற விளையாட்டுகளில் பங்கேற்க வேண்டும் என்று மத்திய இளைஞர் விவகாரங்கள்,  விளையாட்டு, தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா அழைப்பை விடுத்துள்ளார்.

“கேலேகா இந்தியா -கிலேகா இந்தியா” (இந்திய மக்கள் விளையாடும்போது – இந்தியா மலர்ச்சி அடையும்) என்ற பிரதமரின் வார்த்தைகளைக் குறிப்பிட்ட திரு மாண்டவியா,  இந்தியாவை சிறந்த விளையாட்டு தேசமாக மாற்றுவதே பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவு என்றார். அவரால் கற்பனை செய்யப்பட்ட உடல் திறன் இந்தியா (ஃபிட் இந்தியா) இயக்கம், ஒவ்வொரு குடிமகனுக்குமான ஒரு திட்டமாகும் என்று அமைச்சர் கூறினார். மேலும் இந்த ஆண்டு தேசிய விளையாட்டு தினத்தில் நாடு தழுவிய கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் அனைவரும் இருக்க அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் ஃபிட் இந்தியா இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மத்திய அமைச்சர், தங்கள் ஆரோக்கியத்தை பராமரிப்பதும் சுறுசுறுப்பாக இருப்பதும் ஒவ்வொரு  இந்தியரின் பொறுப்பு என்பதை வலியுறுத்தினார். எந்த விளையாட்டாக இருந்தாலும் விளையாடுங்கள், உடல்திறனுடன் இருங்கள்!” என்று கூறியுள்ஏ அமைச்சர், அனைவரையும் இந்த முன்முயற்சியில் சேர ஊக்குவித்தார்.

தேசிய விளையாட்டு தினம் நமது விளையாட்டு நாயகர்களை கௌரவிப்பதற்கான ஒரு வாய்ப்பு  மட்டுமல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை பராமரிக்க விளையாட்டு எவ்வாறு உதவும் என்பதை நினைவூட்டுவதும் ஆகும் என்று திரு மாண்டவியா எடுத்துரைத்தார். தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்றும்,  சுறுசுறுப்பான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பின்னணி:

ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச அரங்கில் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் நமது விளையாட்டு வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மே ...

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம் மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்ல ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்க ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 1. சர்வதேச ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் க ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...