தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய கொண்டாட்டத்திற்கு மன்சூக் மண்டொலியாவிற்கு அழைப்பு

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு அனைத்து மக்களும் குறைந்தது ஒரு மணி நேரமாவது வெளிப்புற விளையாட்டுகளில் பங்கேற்க வேண்டும் என்று மத்திய இளைஞர் விவகாரங்கள்,  விளையாட்டு, தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா அழைப்பை விடுத்துள்ளார்.

“கேலேகா இந்தியா -கிலேகா இந்தியா” (இந்திய மக்கள் விளையாடும்போது – இந்தியா மலர்ச்சி அடையும்) என்ற பிரதமரின் வார்த்தைகளைக் குறிப்பிட்ட திரு மாண்டவியா,  இந்தியாவை சிறந்த விளையாட்டு தேசமாக மாற்றுவதே பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவு என்றார். அவரால் கற்பனை செய்யப்பட்ட உடல் திறன் இந்தியா (ஃபிட் இந்தியா) இயக்கம், ஒவ்வொரு குடிமகனுக்குமான ஒரு திட்டமாகும் என்று அமைச்சர் கூறினார். மேலும் இந்த ஆண்டு தேசிய விளையாட்டு தினத்தில் நாடு தழுவிய கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் அனைவரும் இருக்க அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் ஃபிட் இந்தியா இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மத்திய அமைச்சர், தங்கள் ஆரோக்கியத்தை பராமரிப்பதும் சுறுசுறுப்பாக இருப்பதும் ஒவ்வொரு  இந்தியரின் பொறுப்பு என்பதை வலியுறுத்தினார். எந்த விளையாட்டாக இருந்தாலும் விளையாடுங்கள், உடல்திறனுடன் இருங்கள்!” என்று கூறியுள்ஏ அமைச்சர், அனைவரையும் இந்த முன்முயற்சியில் சேர ஊக்குவித்தார்.

தேசிய விளையாட்டு தினம் நமது விளையாட்டு நாயகர்களை கௌரவிப்பதற்கான ஒரு வாய்ப்பு  மட்டுமல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை பராமரிக்க விளையாட்டு எவ்வாறு உதவும் என்பதை நினைவூட்டுவதும் ஆகும் என்று திரு மாண்டவியா எடுத்துரைத்தார். தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்றும்,  சுறுசுறுப்பான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பின்னணி:

ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச அரங்கில் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் நமது விளையாட்டு வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...