தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய கொண்டாட்டத்திற்கு மன்சூக் மண்டொலியாவிற்கு அழைப்பு

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு அனைத்து மக்களும் குறைந்தது ஒரு மணி நேரமாவது வெளிப்புற விளையாட்டுகளில் பங்கேற்க வேண்டும் என்று மத்திய இளைஞர் விவகாரங்கள்,  விளையாட்டு, தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா அழைப்பை விடுத்துள்ளார்.

“கேலேகா இந்தியா -கிலேகா இந்தியா” (இந்திய மக்கள் விளையாடும்போது – இந்தியா மலர்ச்சி அடையும்) என்ற பிரதமரின் வார்த்தைகளைக் குறிப்பிட்ட திரு மாண்டவியா,  இந்தியாவை சிறந்த விளையாட்டு தேசமாக மாற்றுவதே பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவு என்றார். அவரால் கற்பனை செய்யப்பட்ட உடல் திறன் இந்தியா (ஃபிட் இந்தியா) இயக்கம், ஒவ்வொரு குடிமகனுக்குமான ஒரு திட்டமாகும் என்று அமைச்சர் கூறினார். மேலும் இந்த ஆண்டு தேசிய விளையாட்டு தினத்தில் நாடு தழுவிய கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் அனைவரும் இருக்க அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் ஃபிட் இந்தியா இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மத்திய அமைச்சர், தங்கள் ஆரோக்கியத்தை பராமரிப்பதும் சுறுசுறுப்பாக இருப்பதும் ஒவ்வொரு  இந்தியரின் பொறுப்பு என்பதை வலியுறுத்தினார். எந்த விளையாட்டாக இருந்தாலும் விளையாடுங்கள், உடல்திறனுடன் இருங்கள்!” என்று கூறியுள்ஏ அமைச்சர், அனைவரையும் இந்த முன்முயற்சியில் சேர ஊக்குவித்தார்.

தேசிய விளையாட்டு தினம் நமது விளையாட்டு நாயகர்களை கௌரவிப்பதற்கான ஒரு வாய்ப்பு  மட்டுமல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை பராமரிக்க விளையாட்டு எவ்வாறு உதவும் என்பதை நினைவூட்டுவதும் ஆகும் என்று திரு மாண்டவியா எடுத்துரைத்தார். தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்றும்,  சுறுசுறுப்பான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பின்னணி:

ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச அரங்கில் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் நமது விளையாட்டு வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...