பார்க்கின்சன் நோயைக் கட்டுப்படுத்த புதிய ஸ்மார்ட் சென்சார் திட்டம்

பார்கின்சன் நோயைக் கட்டுப்படுத்த, குறைந்த செலவில், எளிதாக பயன்படுத்தத் தக்க, செல்பேசி அடிப்படையிலான புதிய ஸ்மார்ட் சென்சார் முறையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த சென்சார், உடலில் எல்-டோபாவின் அளவை துல்லியமாக கண்டுபிடிக்க உதவும். இதன் மூலம் இந்த நோயை தீவிரமாக கட்டப்படுத்துவதற்கு தேவையான மருந்தின் அளவை தீர்மானிக்க முடியும்.

நமது உடலில் உள்ள நியூரான் செல்கள் தொடர்ந்து குறைவதால், டோபமைன் அளவு கணிசமாக குறைகிறது. இதனால் பார்கின்சன் நோய் ஏற்படுகிறது. எல்-டோபா எனும் வேதிப்பொருள் நமது உடலில் டோபமைனாக மாற்றப்பட்டு பார்கின்சன் நோய்க்கு எதிரான மருந்தாக செயல்படுகிறது.

டோபமைன் குறைபாட்டை ஈடு செய்ய இது உதவுகிறது. எல்-டோபா சரியான அளவில் நிர்வகிக்கப்படும் வரை நோயும் கட்டுக்குள் இருக்கிறது. இருப்பினும், பார்கின்சன் நோயின் அளவையும் நோயாளியின் வயதையும் பொருத்து நியூரான்களின் இழப்பை ஈடு செய்ய அதிகப்படியான எல்-டோபா தேவைப்படுகிறது.

இருப்பினும், மிக அதிகப்படியான எல்-டோபாவை பயன்படுத்துவது, இரப்பை அழற்சி, மனநோய், சித்தப்பிரமை, குறைந்த ரத்த அழுத்தம் போன்ற பக்க விளைவுகளுக்கு காரணமாகிறது. எல்-டோபா அளவு மிகவும் குறைவது, பார்கின்சன் நோய் அறிகுறிகள் மீண்டும் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.

சிகிச்சையில் எல்-டோபா அளவின் முக்கியத்துவம் கருதி, எளிதாக, குறைந்த செலவில் அதனை கண்காணிக்கும் முறை கண்டறியப்படுவது அவசியமானது. இதையடுத்து மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான நவீன அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் அண்மையில் ஸ்மார்ட் போன் அடிப்படையிலான சென்சார் முறை ஒன்றை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...