பார்க்கின்சன் நோயைக் கட்டுப்படுத்த புதிய ஸ்மார்ட் சென்சார் திட்டம்

பார்கின்சன் நோயைக் கட்டுப்படுத்த, குறைந்த செலவில், எளிதாக பயன்படுத்தத் தக்க, செல்பேசி அடிப்படையிலான புதிய ஸ்மார்ட் சென்சார் முறையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த சென்சார், உடலில் எல்-டோபாவின் அளவை துல்லியமாக கண்டுபிடிக்க உதவும். இதன் மூலம் இந்த நோயை தீவிரமாக கட்டப்படுத்துவதற்கு தேவையான மருந்தின் அளவை தீர்மானிக்க முடியும்.

நமது உடலில் உள்ள நியூரான் செல்கள் தொடர்ந்து குறைவதால், டோபமைன் அளவு கணிசமாக குறைகிறது. இதனால் பார்கின்சன் நோய் ஏற்படுகிறது. எல்-டோபா எனும் வேதிப்பொருள் நமது உடலில் டோபமைனாக மாற்றப்பட்டு பார்கின்சன் நோய்க்கு எதிரான மருந்தாக செயல்படுகிறது.

டோபமைன் குறைபாட்டை ஈடு செய்ய இது உதவுகிறது. எல்-டோபா சரியான அளவில் நிர்வகிக்கப்படும் வரை நோயும் கட்டுக்குள் இருக்கிறது. இருப்பினும், பார்கின்சன் நோயின் அளவையும் நோயாளியின் வயதையும் பொருத்து நியூரான்களின் இழப்பை ஈடு செய்ய அதிகப்படியான எல்-டோபா தேவைப்படுகிறது.

இருப்பினும், மிக அதிகப்படியான எல்-டோபாவை பயன்படுத்துவது, இரப்பை அழற்சி, மனநோய், சித்தப்பிரமை, குறைந்த ரத்த அழுத்தம் போன்ற பக்க விளைவுகளுக்கு காரணமாகிறது. எல்-டோபா அளவு மிகவும் குறைவது, பார்கின்சன் நோய் அறிகுறிகள் மீண்டும் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.

சிகிச்சையில் எல்-டோபா அளவின் முக்கியத்துவம் கருதி, எளிதாக, குறைந்த செலவில் அதனை கண்காணிக்கும் முறை கண்டறியப்படுவது அவசியமானது. இதையடுத்து மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான நவீன அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் அண்மையில் ஸ்மார்ட் போன் அடிப்படையிலான சென்சார் முறை ஒன்றை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...