உப்பு

 'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான உப்பு சுவையற்றது. உடல் அழியாத வண்ணம் காக்கும் சக்தி உப்புக்கு உண்டு. உப்புச்சுவை அதிகமானால் உணர்ச்சிவசப்படுதல், அல்லது கை, கால், முகம் வீக்கம் உண்டாகும்.

தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். அல்லது இரத்த அழுத்தம் உண்டாகும். இரத்தத்தில் உள்ள உப்பைப் பிரிக்க சிறுநீரகங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உப்பு அளவுக்கு மீறினால் தப்பாக முடியும். நாள் ஒன்றுக்கு ஐந்து கிராம் உப்பு போதுமானது.

உப்பை தனியாகப் பயன்படுத்தக்கூடாது. சூடுபடுத்தும் உணவுப் பொருள்களில் பயன்படுத்துவதுதான் சிறந்தது. சூடுபடுத்தாமல் பயன்படுத்தும் உணவுப் பொருள்களுக்கு தனியாக சூடுபடுத்திய உப்பைப் பயன்படுத்த வேண்டும். அல்லது மிளகுத்தூள் கலந்து பயன்படுத்த வேண்டும்.

உப்பின் தாய் கடல். தந்தை சூரியன். சூரிய வெப்பம் இல்லாவிட்டால் உப்பு இல்லை. உப்பை மீண்டும் சூடுபடுத்தினால் அந்த உப்பில் உள்ள தீமைகள் விலகி உப்பு தூய்மையாகும்.

சான்றாக கடலில் இருக்கும் தண்ணீர் உப்பு நிறைந்தது. ஆனால் சூரிய ஒளியால் ஆவியாகி அதன் பின்னர் மேகமாகி, அந்த மேகம் சூரிய ஒளியால் தூய்மையாகிறது. பின்னர் மழையாகப் பொழிகிறது. அந்த மழைநீர் சுத்தமானதாகவும், உப்பு நீங்கியதாகவும் இருக்கிறது.

நம் முன்னோர் உப்பைச் சுத்தப்படுத்திய பிறகே பயன்படுத்தினர். மண்சட்டியில் கல் உப்பை வறுக்க வேண்டும். அப்போது முருங்கைக்கீரை கலந்து வருதால் உப்பில் உள்ள தீமை விலகும். தற்போது நவீன உப்பு வந்துவிட்டது.

நம் முன்னோர் அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு முருங்கை இலைச்சாறு முறையாகப் பயன்படுத்தச் செய்தனர். முருங்கைக் கீரையில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-டி, வைட்டமின்-சி, வைட்டமின்-இ, வைட்டமின்-பி காம்ப்ளக்ஸ் என்று சத்துகள் உள்ளன. இரசாயன உரம் சிறிதும் இல்லாதது முருங்கைக்கீரை.

இயற்கையாக மாறும் உடற்சூட்டை மீண்டும் பெருவது, உடலுழைப்பு உடையவர்க்கு அவர்கள் உழைப்பினால் எளிதாகிறது. உடலுழைப்பு, மூச்சுப்பயிற்சி, உடலுக்கேற்ற உணவுண்பது, உடல் சூட்டை இயற்கையாக காக்கும் சிறந்த முறையாகும்.

அருநெல்லிக்காய், வெள்ளரிப்பிஞ்சு, நுங்கு, இளநீர், தனியா, வெங்காயம், வெங்காயத்தாள், முள்ளங்கி, முள்ளங்கிக்கீரை, முளைக்கீரை, கீரைத்தண்டு, வெண்பூசணிக்காய் போன்றவற்றில் இயற்கையாக உப்புச் சுவை உள்ளது.

நன்றி : வேலூர் மா.குணசேகரன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

புதல்வருக்கு மட்டுமே முதல்வர் � ...

புதல்வருக்கு மட்டுமே முதல்வர் கனவு இருக்க வேண்டுமா – தமிழிசை கேள்வி வைகோ போன்றோர் ஈழப் பிரச்னை நடந்தபோது ஒரு மாதிரி ...

‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் � ...

‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடியவில்லை; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ''ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை'' என்று மத்திய அமைச்சர் ...

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஏவுகணை� ...

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஏவுகணையை சுக்குநூறாக்கியது இந்தியா பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணையை இடைமறித்து இந்தியா ...

பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப ...

பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு டில்லியில் பிரதமர் மோடியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் ...

மிகவும் துல்லியமான தாக்குதல் R ...

மிகவும் துல்லியமான தாக்குதல் – சசி தரூர் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகள் கூடாரங்களை தாக்கி ...

பயங்கரவாதிகளின் முகாம்களை நிர� ...

பயங்கரவாதிகளின் முகாம்களை நிர்மூலமாக்கிய பிரதமர் மோடிக்கு பாராட்டு 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக, பயங்கரவாதிகளின்முகாம்களைநிர்மூலமாக்கிய பிரதமர் மோடிக்கு பாராட்டு ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.