வளர்ச்சி பாதைக்குள் இந்திய பொருளாதாரம் திரும்பும் – அமைச்சர் கோயல் நம்பிக்கை

நடப்பு நிதியாண்டு முடிவடைவதற்குள், இந்திய பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.40 சதவீதமாக சரிந்ததை தொடர்ந்து, நாட்டின் பொருளாதார நிலை குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்ததாவது: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டின் போது, நாட்டில் பொதுத் தேர்தல் நடந்தது. தேர்தல் காலகட்டத்தின் போது, கொள்கை முடிவுகள் மேற்கொள்வது, அதனை செயல்படுத்துவது போன்றவை பாதிப்புக்குள்ளாவது இயல்பே. இதனால் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கான செலவினம் குறைந்து, வளர்ச்சி சரிந்தது. இதன் பிரதிபலிப்பே இரண்டாம் காலாண்டு முடிவில் வெளிப்பட்டது.

ஆனால், நடப்பு காலாண்டின் பொருளாதார தரவுகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளன. மீண்டெழுந்துள்ள உள்கட்டமைப்பு செலவு உள்ளிட்டவற்றின் காரணமாக, நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் நாடு மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என நம்புகிறேன். இவ்வாறு தெரிவித்தார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...