மின்னணு வணிகத்தின் வளர்ச்சி மக்களை மையமாக கொண்டதாக இருக்க வேண்டும் -பியூஷ் கோயல்

மின்னணு வணிகத்தின் வளர்ச்சி குடிமக்களை மையமாகக் கொண்டதாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பஹ்லே இந்தியா அறக்கட்டளையின் ‘இந்தியாவில் வேலைவாய்ப்பு மற்றும் நுகர்வோர் நலனில் மின்னணு வர்த்தகத்தின் நிகர தாக்கம்’ என்ற அறிக்கையை வெளியிட்டு பேசிய அமைச்சர், மின்னணு வர்த்தகத்தின் வளர்ச்சி, சமூகத்தின் பெரும் பிரிவினரிடையே பயன்கள் பகிர்ந்தளிப்பதை ஜனநாயகப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றார்.

தொழில்நுட்பம் என்பது அதிகாரமளித்தல், புதுமைப்படுத்துதல் மற்றும் நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு வழிமுறை என்று திரு கோயல் கூறினார். ஆனால் இந்த வளர்ச்சி ஒரு ஒழுங்கான முறையில் இருக்க வேண்டும் என்று கூறிய அவர், சந்தைப் பங்கிற்கான போட்டியில், நாடு முழுவதும் உள்ள 100 மில்லியன் சிறு சில்லறை விற்பனையாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று கூறினார்.

இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், இன்னும் உறுதியான நடவடிக்கை தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவத்தையும் திரு கோயல் அடிக்கோடிட்டுக் காட்டினார். “எங்கள் உதவிக்கு இன்னும் தகுதியான ஒரு பெரிய பிரிவு அங்கே உள்ளது. இந்தியாவின் எதிர்காலத்திற்கான வேலைகள் மற்றும் வாய்ப்புகள் என்று வரும்போது, நாம் அனைவரும் நம் பங்கை ஆற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன், “என்று அவர் கூறினார்.

இந்தியாவின் பாரம்பரிய சில்லறை விற்பனைத் துறையில் மின்னணு வணிகத்தின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்தும், வேலைவாய்ப்பில் அதன் தாக்கம் குறித்தும் திரு கோயல் கவலை தெரிவித்தார். அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சந்தையின் பாதி மின்னணு-வணிக கட்டமைப்பின் ஒரு பகுதியாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகளை அமைச்சர் எடுத்துரைத்தார், இது “கவலைக்குரிய விஷயம்” என்று அவர் விவரித்தார்.

மின்னணு வர்த்தகத்தின் பரந்த தாக்கங்களை பிரதிபலிக்கும் வகையில், அதன் தாக்கம் குறித்து நடுநிலையான மற்றும் தரவு அடிப்படையிலான பகுப்பாய்வை திரு கோயல் வலியுறுத்தினார். மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசிய திரு கோயல், மின்னணு வணிகத்தின் வளர்ச்சி காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் பாரம்பரிய கடைகள் வீழ்ச்சியடைந்து வருவதைக் குறிப்பிட்டார். சுவிட்சர்லாந்து மின்னணு வணிக விஷயத்தில் எச்சரிக்கையான அணுகுமுறையைக் கொண்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“நான் மின்னணு வணிகத்தை விட்டுவிட விரும்பவில்லை. ஆனால் அதன் பங்கு குறித்து நாம் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் சிந்திக்க வேண்டும்” என்று திரு கோயல் வலியுறுத்தினார்.

உள்ளூர் வணிகங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில், குறிப்பாக மருந்தகங்கள் மற்றும் மொபைல் போன் பழுதுபார்க்கும் கடைகள் போன்ற துறைகளில் மின்னணு வணிகத்தின் தாக்கம் குறித்து அமைச்சர் தமது கவலையை வெளிப்படுத்தினார். தமது உரையை நிறைவு செய்த அவர், நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப மின்னணு வணிகத்தின் தாக்கத்தை விரிவாகவும், விஞ்ஞான ரீதியாகவும் கவனமாக ஆய்வு செய்து மதிப்பீடு செய்ய வேண்டும் என்று வர்த்தக சமூகத்தினரையும், நிபுணர்களையும் வலியுறுத்தினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...