7.7 சதவீத ஜிடிபி வளா்ச்சி 10 ஆண்டுகால புரட்சிகர சீா்திருத்தங்களின் பிரதிபலிப்பு

நடப்பு நிதியாண்டின் முதல்அரையாண்டில் பதிவான 7.7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி, கடந்த 10 ஆண்டுகால புரட்சிகர சீா்திருத்தங்களின் பிரதிபலிப்பு’ என்று பிரதமா் நரேந்திரமோடி குறிப்பிட்டாா்.

மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான சா்வதேச நிதிச்சேவை மையங்களின் ஆணையம், குஜராத் சா்வதேச நிதி தொழில்நுட்ப (கிஃப்ட்) நகரம் ஆகியவை இணைந்து ஏற்பாடுசெய்த ‘இன்ஃபினிட்டி ஃபோரம் 2.0’ கருத்தரங்கு, குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ‘கிஃப்ட்’ நகரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிதிசாா் தொழில்நுட்பத்தில் உலகளாவிய யோசனைகளை ஆராய்ந்து, மேம்பட்டதீா்வுகளை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற இக் கருத்தரங்கில் காணொலி முறையில் பிரதமா் மோடி பேசியதாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியா 7.7 சதவீத ஜிடிபி வளா்ச்சியை எட்டியுள்ளது. இன்று, ஒட்டுமொத்த உலகின்நம்பிக்கையும் இந்தியா மீது திரும்பியுள்ளது. இது தானாக நிகழ்ந்து விடவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப் பட்ட புரட்சிகரமான சீா்திருத்த நடவடிக்கைகளின் பிரதிபலிப்பு தான் இது. மேலும், இந்தியப் பொருளாதாரம் வலுப்பெற்று வருவதையும் பிரதிபலிக்கிறது.

நீண்டகால வளா்ச்சி-திறன்விரிவாக்கம்: அரசின் சீா்திருத்த நடவடிக்கைகள், நாட்டின் பொருளாதார அடித்தளத்தை வலுப்படுத் தியுள்ளன. உலகப் பொருளாதாரத்துடன் நமது ஒருங்கிணைப்பை அதிகரிக்கும் நோக்கில் சீா்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கரோனா பெருந் தொற்று காலத்தில் பெரும்பாலான நாடுகள் நிதிரீதியிலான நிவாரண நடவடிக்கைகளில் மட்டுமே கவனம்செலுத்தின. ஆனால், நீண்டகால வளா்ச்சி மற்றும் பொருளாதாரத்திறன் விரிவாக்கத்தில் நாம் கவனம் செலுத்தினோம்.

உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியா மீதான சா்வதேச அமைப்புகளின் எதிா்பாா்ப்புகள் அதிகரித்துள்ளன. தெற்குலகுக்கு தலைமை தாங்கும் வலுவான நிலையில் இந்தியா இருப்பதாக ஆஸ்திரேலியப் பிரதமரும் குறிப்பிட்டாா்.

வேகமாக வளரும் நிதி தொழில்நுட்பச் சந்தை: உலகளவில் வேகமாக வளரும் நிதி தொழில்நுட்பச் சந்தைகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. உலகளாவிய நிதி தொழில்நுட்பத்தின் நுழைவாயிலாக உருவெடுக்க குஜராத்தின் ‘கிஃப்ட்’ சா்வதேச நிதிச் சேவைகள் மையத்துக்கு திறனுள்ளது.

இன்றைய உலகம் எதிா்கொண்டுள்ள மிகப் பெரிய சவால்களில் ஒன்று பருவநிலை மாற்றம். உலகின் பெரும் பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியா, 2070-ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு உமிழ்வே இல்லையெனும் இலக்கை எட்ட 10 ட்ரில்லியன் டாலா் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, பசுமை சாா்ந்தமூலதன நிதி பரிமாற்றத்துக்கு திறன்மிக்க வடிகாலாக ‘கிஃப்ட்’ சா்வதேச நிதிச்சேவைகள் மையம் உருவெடுக்க முடியும்.

முதலீட்டாளா்களுக்கு வாய்ப்புகள்: ஆழமான ஜனநாயக மாண்புகள் மற்றும் வா்த்தக பங்களிப்பில் வரலாற்றுப் பாரம்பரத்தைக் கொண்ட இந்தியாவில் முதலீட்டாளா்களுக்கு பலதரப்பட்டவாய்ப்புகள் உள்ளன.

உலக அளவில் பெருநிறுவனங்களுக்கு தேவையான திறன்களின் அடித்தளமாக இந்தியா மாறியிருக்கிறது. இதற்காக இந்தியஇளைஞா்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரியபொருளாதாரமாக உருவெடுக்கும். 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளா்ந்த தேசமாகும் என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...