ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியில் பரபரப்பான கிறிஸ்துமஸ் சந்தையில் சொகுசு கார் புகுந்ததில், ஐந்து பேர் பலியாகினர்; 70 பேர் காயமடைந்தனர். காரை தாறுமாறாக ஓட்டிய சவுதி அரேபியா டாக்டர் கைது செய்யப்பட்டார்; இதில் பயங்கரவாதிகளின் பின்னணி உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் இந்தியர்கள் ஏழு பேரும் காயம் அடைந்துள்ளனர்.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த கொடூரமான தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். பல விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியுள்ளன, பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இந்தியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம்.

அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் செய்து கொடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்தனை செய்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...