ஒரே நாடு ஒரே தேர்தல் லோக் சபாவில் இன்று தாக்கல்

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கான மசோதாவை மத்திய அரசு, லோக்சபாவில் இன்று தாக்கல் செய்கிறது. இதையொட்டி எம்.பி.,க்களுக்கு கட்டாயம் அவையில் இருக்கும்படி பா.ஜ., உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்று மசோதா தாக்கல் செய்ய திட்டமிடப்பட்ட நிலையில், இந்த மசோதாவின் நகல் எம்.பி.,க்கள் மத்தியில் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 20ம் தேதி முடிவடைவயும் நிலையில், மத்திய அரசு தற்போது இந்த முடிவை எடுத்துள்ளது.

முன்னதாக, மத்திய அமைச்சரவை டிசம்பர் 12 அன்று மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், லோக்சபா மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்த இந்த மசோதா பரிந்துரைக்கிறது.

இதுதொடர்பாக பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு பார்லிமென்ட் கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்று தெரிகிறது.
இதனிடையே இன்று இரு அவைகளிலும் விவாதிக்கப்பட வேண்டிய சில முக்கியமான அலுவல்கள் இருக்கும் நிலையில், தங்கள் கட்சி எம்.பி.,க்கள் அனைவரும் அவையில் இருக்குமாறு பா.ஜ., அறிவுறுத்தி உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...