ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கூட்டுக்குழு தலைவராக பி.பி சவுத்ரி நியமனம்

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக்குழு( ஜே.பி.சி.,) தலைவராக பா.ஜ., எம்.பி.,யும் முன்னாள் மத்திய அமைச்சருமான பி.பி. சவுத்ரி நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த வகை செய்யும் மசோதா, லோக்சபாவில் டிச., 17 ல் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை பார்லிமென்ட் கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப லோக்சபா எம்.பி.,க்கள் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்தனர். இது தொடர்பான இரு மசோதாவை ஆய்வு செய்வதற்கான ஜே.பி.சி., என்றழைக்கப்படும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் இடம்பெறும் லோக்சபாவை சேர்ந்த எம்.பி.,க்கள் பெயர்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

பா.ஜ., சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் பிபி சவுத்ரி, அனுராக் தாக்கூர், எம்.பி.,க்கள் பர்ஷோத்தம்பாய் ரூபாலா, பன்சுரி சுவராஜ், சம்பித் பத்ரா, சி.எம்.ரமேஷ், விஷ்ணு தயால் ராம், பரத்ருஹரி மஹ்தாப், அனில் பலூனி, விஷணு தத் சர்மா, பைஜெயந்த் பன்டா,சஞ்சய் ஜெயிஸ்வால்

தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ., எம்.பி.,யுமான பி.பி.சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 2017- 19 காலகட்டத்தில் கார்பரேட் விவகாரம், சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் பதவி வகித்து வந்தார். இவர் வெளியுறவு குழுவுக்கான தலைவராகவும், தனிநபர் பாதுகாப்பு மசோதாவிற்கான கூட்டு குழு தலைவராகவும் பதவி வகித்து உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மே ...

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம் மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்ல ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்க ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 1. சர்வதேச ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் க ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...