அண்ணல் அம்பேத்கரை அவமதித்தவர்கள் பேசுகிறார்கள்

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் நத்தை வேகத்தில் ஊர்ந்து காலதாமதம் ஏற்படுத்துவது போலவும் அதை வேகப்படுத்த அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் கோபம் கொண்டு அண்ணல் அம்பேத்கர் அவர்களை சாட்டையால் அடிப்பது போலவும் 1950 ஆம் ஆண்டு கேலிச்சித்திரம் வரைந்த கேசவ் சங்கர் பிள்ளை என்பவர் Children’s Book Trust என்கிற புத்தகத்தில் அச்சித்திரத்தை அச்சிட்டு வெளியிட்டார்.
அண்ணலை அவமதித்த கேசவ் சங்கர் பிள்ளைக்கு காங்கிரஸ் அரசு 1956 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 1966 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும், 1976 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கி கெளரவித்தது. அதுமட்டுமல்ல மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது 2012 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் (UPA-2) அந்த கேலிச்சித்திரத்தை NCERT பாடத்திட்டத்தில் சேர்த்தது. அந்த கூட்டணி ஆட்சியில் திமுகவும் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ படத்தை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வைக்க அனுமதி மறுத்த அதே காங்கிரஸ் தான் அவரது கேலிச்சித்திரத்தை NCERT பாடத்திட்டத்தில் வைக்க அனுமதி அளித்தது.
அண்ணல் அம்பேத்கரை கேலிச்சித்திரம் வரைந்து அவமதித்தவருக்கு அடுத்தடுத்து மூன்று விருதுகள் வழங்கியும், அண்ணலின் கேலிச்சித்திரத்தை பாடத்திட்டத்தில் சேர்த்து அவமதித்தும் அவரது புகழுக்கு களங்கம் விளைவித்த கேடுகெட்ட காங்கிரஸ் இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பெயரை திரும்ப திரும்ப உச்சரிப்பது அவர்கள் செய்த தவறுகளை மறைப்பதற்கு செய்யும் முயற்சியேயன்றி வேறொன்றும் இல்லை.
இந்தியாவில் இதுவரை நடந்த தீண்டாமை கொடுமைகளில் உச்சபட்ச தீண்டாமையே இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்களை அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி ஏற்று பிரதமரான ஒருவர் சாட்டையால் அடிப்பது போன்ற கேலிச்சித்திரத்தை வரைந்தவருக்கு மூன்று முறை விருது கொடுத்ததும், அந்த கேலிச்சித்திரத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க அனுமதி கொடுத்ததும் தான்.
                                                                                                                          –  நன்றி ப.ஜ.க மூத்த தலைவர் H. ராஜா             

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...