ஆமணக்கின் மருத்துவக் குணம்

 ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் தணலில் காட்டி பால் வற்றிய பெண்களின் தனங்களில் வைத்துக் கட்டி வந்தால் பால் சுரப்பு நன்கு உண்டாகும்.

இவ்விலைகளைச் சிறிதாக அறிந்து, சிற்றாமணக்கு நெய்விட்டு வதக்கி, பொறுக்கும் சூட்டுடன், வேதனையுடன் கூடிய கீல்வாதங்களுக்கு, வாத இரத்த வீக்கங்களுக்கும் ஒற்றடமிடலாம். இதனால் வேதனை தணியும்.

சிற்றாமணக்கு இலையும், கீழாநெல்லி இலையையும் சமமாக எடுத்து அரைத்துச் சிறு எலுமிச்சங்காயளவு, மூன்று நாளைக்கு காலையில் மட்டும் கொடுத்து நாளாம் நாள் 3,4 முறை வயிறு போகுமாறு சிவதை சூரணம் கொடுக்க காமாலை நீங்கும்.

மலக்கட்டும் வயிற்று வலியுமுள்ள காலத்திலேனும் சூதக்கட்டு அல்லது சூதகத் தடையுடன், அடிவயிற்றில் வலி காணும் போதேனும் அடிவயிற்றின் மீது சிற்றாமணக்கு இலைகளை வதக்கிப் போட்டுவர அவைகள் யாவும் குணப்படும்.

சிறு முத்துக்களிளிருந்து எடுக்கப்படும் நெய்க்குச் சிற்றாமணக்கு நெய் (அ) சிற்றாமணக்கு எண்ணெய்.

பெரு முத்துக்களிளிருந்து எடுக்கும்  எண்ணெய் பெருமுத்துக்கொட்டை எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் என்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

 

இந்த இலையை நன்கு குறுக அறிந்து சிற்றாமணக்கு நெய்விட்டு நன்றாக வதக்கி ஒரு துணியில் வைத்து முடிந்து ஆசனத்தில் மெல்ல ஒத்தடம் கொடுத்து வருவதன் மூலமும், வதக்கிய இலையை ஆசனவாயிலில் வைத்துக் கட்டுவதன் மூலமும், மூலம் சம்பந்தமான நோய்கள் குணமாவதுடன் மூலக் கடுப்பும் நீங்கும்.

இதன் தளிர் இலைகளை எடுத்துச் சிற்றாமணக்கு நெய் தடவி அனலில்வாட்டி வயிற்றில் வைத்துக் கட்டி வந்தால் எந்தவிதமான கடுமையான வயிற்றுவலியாக இருந்தாலும் குணமாகிவிடும்.

ஆமணக்கு நெய் நன்கு மலத்தை இளக்கும் நல்ல மருந்துப் பொருளாகும், பெரியவர்களுக்குப் பசுவின் பாலுடனாவது இஞ்சிச் சாற்றுடனாவது ஏறக்குறைய இரண்டு தேக்கரண்டியளவு கலந்து கொடுக்க வேண்டும். சிறியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் எண்ணெய்யின் அளவைப் பாதிக்குப்பாதியாகக் குறைப்பது நல்லது. இவ்விதம் கொடுத்தால் மலம் நன்கு இளகும், இதைத் தொடர்ந்து கொடுத்து வரக்கூடாது. எப்போதாவது ஒருமுறைதான் கொடுக்க வேண்டும். மூலரோகத்தால் துன்பப்படுபவர்களுக்கும், பிரசவித்த பெண்களுக்கும் கொடுத்து வர மலக்கட்டைப் போக்கலாம். ஆக, ஆமணக்கும் ஒரு நல்ல மருந்து பொருளாகத் திகழ்கிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா மட்டும் தான் போரில் இரு ...

இந்தியா மட்டும் தான் போரில் இருந்து ஒதுங்கி வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கையில் ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்த ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்தியாவைக் குறை கூறுவது தவறான தகவல் தந்திரமாகும். ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena-வை அமெரிக்கா மூழ்கடிக்க "அனுமதித்ததற்காக" ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த்தியாக இந்தியா ஆகும். 2023 க்கு முன்பு வெறும் 2 அல்லது 3% ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மா ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு – பிரதமர் மோடி உரை வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப் ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் திறந்து வைக்கும் மோடி தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்ச ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்சியடைந்த பாரதத்தின் அடித்தளமாக விளங்கும் மகளிர் சக்தி * சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...