ஆமணக்கின் மருத்துவக் குணம்

 ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் தணலில் காட்டி பால் வற்றிய பெண்களின் தனங்களில் வைத்துக் கட்டி வந்தால் பால் சுரப்பு நன்கு உண்டாகும்.

இவ்விலைகளைச் சிறிதாக அறிந்து, சிற்றாமணக்கு நெய்விட்டு வதக்கி, பொறுக்கும் சூட்டுடன், வேதனையுடன் கூடிய கீல்வாதங்களுக்கு, வாத இரத்த வீக்கங்களுக்கும் ஒற்றடமிடலாம். இதனால் வேதனை தணியும்.

சிற்றாமணக்கு இலையும், கீழாநெல்லி இலையையும் சமமாக எடுத்து அரைத்துச் சிறு எலுமிச்சங்காயளவு, மூன்று நாளைக்கு காலையில் மட்டும் கொடுத்து நாளாம் நாள் 3,4 முறை வயிறு போகுமாறு சிவதை சூரணம் கொடுக்க காமாலை நீங்கும்.

மலக்கட்டும் வயிற்று வலியுமுள்ள காலத்திலேனும் சூதக்கட்டு அல்லது சூதகத் தடையுடன், அடிவயிற்றில் வலி காணும் போதேனும் அடிவயிற்றின் மீது சிற்றாமணக்கு இலைகளை வதக்கிப் போட்டுவர அவைகள் யாவும் குணப்படும்.

சிறு முத்துக்களிளிருந்து எடுக்கப்படும் நெய்க்குச் சிற்றாமணக்கு நெய் (அ) சிற்றாமணக்கு எண்ணெய்.

பெரு முத்துக்களிளிருந்து எடுக்கும்  எண்ணெய் பெருமுத்துக்கொட்டை எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் என்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

 

இந்த இலையை நன்கு குறுக அறிந்து சிற்றாமணக்கு நெய்விட்டு நன்றாக வதக்கி ஒரு துணியில் வைத்து முடிந்து ஆசனத்தில் மெல்ல ஒத்தடம் கொடுத்து வருவதன் மூலமும், வதக்கிய இலையை ஆசனவாயிலில் வைத்துக் கட்டுவதன் மூலமும், மூலம் சம்பந்தமான நோய்கள் குணமாவதுடன் மூலக் கடுப்பும் நீங்கும்.

இதன் தளிர் இலைகளை எடுத்துச் சிற்றாமணக்கு நெய் தடவி அனலில்வாட்டி வயிற்றில் வைத்துக் கட்டி வந்தால் எந்தவிதமான கடுமையான வயிற்றுவலியாக இருந்தாலும் குணமாகிவிடும்.

ஆமணக்கு நெய் நன்கு மலத்தை இளக்கும் நல்ல மருந்துப் பொருளாகும், பெரியவர்களுக்குப் பசுவின் பாலுடனாவது இஞ்சிச் சாற்றுடனாவது ஏறக்குறைய இரண்டு தேக்கரண்டியளவு கலந்து கொடுக்க வேண்டும். சிறியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் எண்ணெய்யின் அளவைப் பாதிக்குப்பாதியாகக் குறைப்பது நல்லது. இவ்விதம் கொடுத்தால் மலம் நன்கு இளகும், இதைத் தொடர்ந்து கொடுத்து வரக்கூடாது. எப்போதாவது ஒருமுறைதான் கொடுக்க வேண்டும். மூலரோகத்தால் துன்பப்படுபவர்களுக்கும், பிரசவித்த பெண்களுக்கும் கொடுத்து வர மலக்கட்டைப் போக்கலாம். ஆக, ஆமணக்கும் ஒரு நல்ல மருந்து பொருளாகத் திகழ்கிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் � ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்� ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த� ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ� ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...