ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை – மோடி பெருமிதம்

‘கடந்த ஒன்றரை ஆண்டுகளில், 10 லட்சம் இளைஞர்களுக்கு எங்கள் அரசு அரசு வேலை வழங்கியுள்ளது, இது ஒரு சாதனை’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உள்துறை, அஞ்சல், உயர்கல்வி, சுகாதாரம் மற்றும் நிதி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு துறைகளில், பணிக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட, 71 ஆயிரம் பேருக்கு வீடியோ கான்பரன்சிங் வாயிலாக,இன்று (டிச.,23) பிரதமர் மோடி பணி நியமன ஆணையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

நான் நேற்று இரவு குவைத்தில் இருந்து திரும்பி வந்துள்ளேன். அங்கு இந்திய இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து பேசியது மகிழ்ச்சி. இன்று நாட்டின் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவு நனவாகியிருப்பது மகிழ்ச்சியான தருணம். இது உங்கள் அனைவருக்கும் ஒரு புதிய துவக்கம். உங்கள் கடின உழைப்பு இறுதியாக வெற்றி அடைந்துள்ளது.

இன்று அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை பெற்ற, இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். நமது இளைஞர்களின் திறமையை பயன்படுத்தி கொள்ள பா.ஜ., அரசு முன்னுரிமை அளிக்கிறது. இதற்கு நீண்ட காலமாக, உழைத்து வருகிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் உழைக்க வேண்டும். விண்வெளியில் இருந்து பாதுகாப்பு வரை மற்றும் சுற்றுலா முதல் சுகாதாரம் வரை, இன்று இந்தியா ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...