தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் காலையில் மட்டும் மருந்தைக் கழுவி விட்டுப் புதுச் சாறு தடவி வந்தால் ஐந்தே நாட்களில் தேமல் மறையும்.
உடலில் ஏற்பட்ட சில வகைப் புண் குழியாகி, ஆறாமல், தொந்தரவு கொடுக்கும். இந்தப் புண்னை ஆற்றத் தொட்டாற்சுருங்கி இலைகளைக் கொண்டு வந்து, அதை இடித்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, அந்தச் சாற்றைப் புண்ணின் குழியில் விட்டு, அதன் மேல் இதே இலையைக் கனமாக வைத்துத் துணி கொண்டு நன்றாக கட்டி விட வேண்டும். இந்த விதமாகக் காலையில் கட்டி மறுநாள் காலை எடுத்து விட்டு சுத்தம் செய்து, புதிய சாறு விட்டு பழையபடி இலை வைத்துக் கட்ட வேண்டும். இந்த விதமாகச் செய்து வந்தால் ஒரே வாரத்தில் புண் ஆறி விடும்.
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.