தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் காலையில் மட்டும் மருந்தைக் கழுவி விட்டுப் புதுச் சாறு தடவி வந்தால் ஐந்தே நாட்களில் தேமல் மறையும்.
உடலில் ஏற்பட்ட சில வகைப் புண் குழியாகி, ஆறாமல், தொந்தரவு கொடுக்கும். இந்தப் புண்னை ஆற்றத் தொட்டாற்சுருங்கி இலைகளைக் கொண்டு வந்து, அதை இடித்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, அந்தச் சாற்றைப் புண்ணின் குழியில் விட்டு, அதன் மேல் இதே இலையைக் கனமாக வைத்துத் துணி கொண்டு நன்றாக கட்டி விட வேண்டும். இந்த விதமாகக் காலையில் கட்டி மறுநாள் காலை எடுத்து விட்டு சுத்தம் செய்து, புதிய சாறு விட்டு பழையபடி இலை வைத்துக் கட்ட வேண்டும். இந்த விதமாகச் செய்து வந்தால் ஒரே வாரத்தில் புண் ஆறி விடும்.
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.