கல்வி தரத்தை மேம்படுத்தவே ஆல் பாஸ் முறை ரத்து – அண்ணாமலை

தமிழகத்தில் கல்வி தரம் குறைந்துள்ளது; மத்திய அரசை பொறுத்த வரை, அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதே நோக்கம்; இந்தியாவின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு உள்ளது,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அவரது பேட்டி:

பயங்கரவாதிகள், நக்சல் ஆதிக்கம் உள்ள காஷ்மீர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில், ‘ஓட்டு போடக் கூடாது; ஓட்டு போட்டால் கொலை செய்து விடுவோம்’ என, மக்களை அச்சுறுத்துகின்றனர்.

இதனால் தான் ஓட்டுப்போட்டவர்கள், கண்காணிப்பு கேமரா பதிவு மக்களுக்கு தரப்படாது என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இது, மக்களின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும். ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும். இதை பா.ஜ., வரவேற்கிறது.

அனைத்து குழந்தைகளுக்கும், தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதே, மத்திய அரசின் நோக்கம். மூன்றாம் வகுப்பு மாணவர்களின் கணிதம், அறிவியல் பாடங்களின் கல்வி திறன், இந்திய சராசரியை விட, தமிழகத்தில் குறைவாக உள்ளது. இந்தியாவின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.

தமிழகத்தில் கல்வி தரம் குறைந்துள்ளது. தமிழக கல்வி தரத்தை, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களுடன் ஒப்பிட வேண்டும். அதை விட்டு, பீஹாருடன் ஒப்பிட்டு பேச கூடாது. டில்லியில் நேற்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, தமிழகத்தில் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்தேன்.
திருவண்ணாமலை, கோவை, ராமநாதபுரத்தில் பா.ஜ., அலுவலகம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. இம்மாதம் கடைசிக்குள், அமித் ஷா தமிழகம் வர வாய்ப்புள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில், என் துாரத்து உறவினர் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

நானும், செந்தில் பாலாஜியும் பங்காளிகள். ஒரே கோவிலுக்கு செல்லும் உறவினர்கள்.

அரசியலுக்கு வருவதற்கு முன், என் வீட்டிற்கு செந்தில் பாலாஜி வந்து, என் தாய் கையில் சாப்பிட்டு சென்றுள்ளார்.

நானும், ஜோதிமணியும் உறவினர்கள். கொங்கு பகுதியில் உள்ளவர்கள், ஏதோ ஒரு வகையில் உறவினர்கள். நானும், செந்தில் பாலாஜியும், ஜோதிமணியும் எதிரும் புதிருமாக அரசியல் செய்கிறோம்.

என் ரத்த சொந்தத்தில், வருமான வரித்துறை சோதனை செய்தால், என்னிடம் கேள்வி கேட்கலாம். துாரத்து உறவினர் வீட்டில் நடக்கும் சோதனைக்கு, நான் எப்படி பொறுப்பேற்க முடியும்?

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...