கல்வி தரத்தை மேம்படுத்தவே ஆல் பாஸ் முறை ரத்து – அண்ணாமலை

தமிழகத்தில் கல்வி தரம் குறைந்துள்ளது; மத்திய அரசை பொறுத்த வரை, அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதே நோக்கம்; இந்தியாவின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு உள்ளது,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அவரது பேட்டி:

பயங்கரவாதிகள், நக்சல் ஆதிக்கம் உள்ள காஷ்மீர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில், ‘ஓட்டு போடக் கூடாது; ஓட்டு போட்டால் கொலை செய்து விடுவோம்’ என, மக்களை அச்சுறுத்துகின்றனர்.

இதனால் தான் ஓட்டுப்போட்டவர்கள், கண்காணிப்பு கேமரா பதிவு மக்களுக்கு தரப்படாது என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இது, மக்களின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும். ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும். இதை பா.ஜ., வரவேற்கிறது.

அனைத்து குழந்தைகளுக்கும், தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதே, மத்திய அரசின் நோக்கம். மூன்றாம் வகுப்பு மாணவர்களின் கணிதம், அறிவியல் பாடங்களின் கல்வி திறன், இந்திய சராசரியை விட, தமிழகத்தில் குறைவாக உள்ளது. இந்தியாவின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.

தமிழகத்தில் கல்வி தரம் குறைந்துள்ளது. தமிழக கல்வி தரத்தை, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களுடன் ஒப்பிட வேண்டும். அதை விட்டு, பீஹாருடன் ஒப்பிட்டு பேச கூடாது. டில்லியில் நேற்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, தமிழகத்தில் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்தேன்.
திருவண்ணாமலை, கோவை, ராமநாதபுரத்தில் பா.ஜ., அலுவலகம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. இம்மாதம் கடைசிக்குள், அமித் ஷா தமிழகம் வர வாய்ப்புள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில், என் துாரத்து உறவினர் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

நானும், செந்தில் பாலாஜியும் பங்காளிகள். ஒரே கோவிலுக்கு செல்லும் உறவினர்கள்.

அரசியலுக்கு வருவதற்கு முன், என் வீட்டிற்கு செந்தில் பாலாஜி வந்து, என் தாய் கையில் சாப்பிட்டு சென்றுள்ளார்.

நானும், ஜோதிமணியும் உறவினர்கள். கொங்கு பகுதியில் உள்ளவர்கள், ஏதோ ஒரு வகையில் உறவினர்கள். நானும், செந்தில் பாலாஜியும், ஜோதிமணியும் எதிரும் புதிருமாக அரசியல் செய்கிறோம்.

என் ரத்த சொந்தத்தில், வருமான வரித்துறை சோதனை செய்தால், என்னிடம் கேள்வி கேட்கலாம். துாரத்து உறவினர் வீட்டில் நடக்கும் சோதனைக்கு, நான் எப்படி பொறுப்பேற்க முடியும்?

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...