ஆங்கலப்புத்தாண்டை கொண்டாட, ராகுல் வியட்நாம் சென்றது குறித்து பா.ஜ., விமர்சனம் செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த டிச.26 அன்று காலமானார். அவரது மறைவுக்கு நாடே இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல், ஆங்கிலப்புத்தாண்டை கொண்டாட வியட்நாம் சென்றுள்ளார் என்று பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அமித் மாளவியா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ராகுல் உணர்வில்லாதவர், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ராகுல் மட்டும் புத்தாண்டை கொண்டாட வியட்நாம் சென்றுள்ளார்.
காங்கிரஸ் கட்சியினர் சீக்கியர்களை வெறுக்கிறார்கள். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவும் தர்பார் சாஹிப்பை இழிவுபடுத்தினார் என்பதை மறந்துவிடாதீர்கள்.
என்று பதிவிட்டிருந்தார்.
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |