ராகுலின் பொறுப்பற்ற அரசியலில் ஈடுபடுவது ஆழ்ந்த வருத்தமளிக்கிறது – ராஜ்நாத் சிங்

தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் பொறுப்பற்ற அரசியலில் ஈடுபடுவது ஆழ்ந்த வருத்தமளிக்கிறது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்நாத் சிங் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இந்தியா-சீன எல்லை நிலைமை குறித்து ராணுவத் தளபதியின் அறிக்கை குறித்து நேற்று பார்லிமென்டில் ஆற்றிய உரையில் தவறான குற்றச்சாட்டுகளை ராகுல் முன்வைத்தார்.

ராணுவத் தலைவரின் கருத்துக்கள் இரு தரப்பினரின் பாரம்பரிய ரோந்துப் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதை மட்டுமே குறிப்பிட்டன. மத்திய அரசு இந்த விவரங்களை பார்லிமென்டில் பகிர்ந்துள்ளது.

ராகுல் கூறிய வார்த்தைகளை ராணுவ தளபதி எந்த நேரத்திலும் பேசியதில்லை. தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் பொறுப்பற்ற அரசியலில் ஈடுபடுவது ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. சீனா ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதி ஏதேனும் இருந்தால், அது 1962 மோதலின் விளைவாக அக்சாய் சினில் 38,000 சதுர கி.மீ. மற்றும் 1963 இல் பாகிஸ்தானால் சட்டவிரோதமாக சீனாவிற்குக் கொடுக்கப்பட்ட 5,180 சதுர கி.மீ. ஆகும். நமது வரலாற்றின் இந்தக் கட்டத்தைப் பற்றி ராகுல் சுயபரிசோதனை செய்து கொள்ளலாம்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...