வழக்கை திசை திருப்ப முயற்சி செய்து வரும் திமுக அரசு – அண்ணாமலை

‘வழக்கை திசை திருப்ப தொடர்ந்து முயற்சி செய்து  வரும் தி.மு.க., அரசை கண்டிக்க, அனைத்து கட்சியினரும் முன்வர வேண்டும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

‘ஒரு பெண் கல்லுாரிக்குள் நுழைந்தால், அது சமூக புரட்சி’ என்று நிகழ்ச்சி ஒன்றில், முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். கல்லுாரிக்குள் நுழைந்து, அங்கு பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவனை, தங்கள் கட்சியில் இருந்து இன்று வரை நீக்காமல், ஒரு ஆட்சியை நடத்தி கொண்டிருக்கும்போது, மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்வரே?

ஒரு பெண் கல்லுாரிக்குள் நுழைந்தால், அது சமூக புரட்சி; அந்த பெண்ணுக்கு கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பைக்கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி தான், இந்த திராவிட ‘டிசாஸ்டர் மாடல்!’

அண்ணா பல்கலை மாணவி மீது பாலியல் தாக்குதல் குறித்து முன்னுக்கு பின் முரணமாக, காவல் துறையும், அமைச்சர்களும் பேசி வருகின்றனர். தி.மு.க., அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்து, தமிழக பா.ஜ., தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

த.வெ.க., தலைவர் விஜயும், தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, கவர்னரை சந்தித்து பேசியிருப்பதை வரவேற்கிறோம். வழக்கை திசை திருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் தி.மு.க., அரசை கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்து கட்சியினரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...