இயற்கையான வாழ்வு சில நியதிகள்

 பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது.

உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும்.

மதிய உணவுக்கு முன்போ, பின்போ அரைமணி நேரம் நடக்க வேண்டும்.

உண்பதற்கு அரைமணிக்கு முன்பும், உண்டபின் ஒரு மணி நேரம் கழித்தும் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவின் இடையிடையே தண்ணீர் குடிக்கவே கூடாது.

இயற்கையின் சூரியஒளி தரும் வைட்டமின் 'டி' யைப் பெற தினமும் காலையில் சூரியஒளி முன்பு நில்லுங்கள்.

படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்ததும் இரண்டு அல்லது மூன்று டம்ளர்கள் தண்ணீர் பருகவும். பின்பு நாள் முழுக்க இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்கவும்.

தினமும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

தினமும் காலையில் குறைந்தது முக்கால் மணி நேரமாவது சுறுசுறுப்பாக நடக்க வேண்டும்.

ஆறுமணி நேர இடைவெளி விட்டே சாப்பிட வேண்டும்.

உணவை அவசர அவசரமாகச் சாப்பிடக் கூடாது. மென்று சுவைத்துச் சாப்பிட வேண்டும்.

உண்ணும் முன்பு கைகளைக் கழுவ வேண்டும். கழிவறை சென்று வந்தபின் சோப்பு நீரில் கைகளைக் கழுவுவது நல்லது.

நிமிர்ந்து உட்கார்ந்து பணி செய்ய வேண்டும்.

கொழுப்பு எண்ணையைத் தவிர்க்கவும்.

நீராவியில் வேகவைக்க வேண்டும். அரைவேக்காடாக வெந்த காய்கறிகளை உண்ண வேண்டும்.

தினமும் ஒன்றிரண்டு பழங்களைச் சாப்பிட வேண்டும்.

வாரம் ஒருமுறை பட்டினி.

காலந் தாழ்த்திய உணவையும், தூக்கத்தையும் தவிர்க்க.

வெந்த உணவோடு, வேகாத உணவையும் சேர்த்து உண்ணலாகாது.
பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவையாவது ஒரு நாள் முழுக்க சமைக்காத உணவை – பழங்கள், காய்கறிகளை உண்க.

மலச்சிக்கலுக்கு எனிமா எடுத்துக் கொள்க.

சூரிய ஒளி, வெளிச்சமுள்ள வசிப்பிடம் வேண்டும்.
உடற்பயிற்சி, யோகா செய்க. கூடவே போதிய ஓய்வும் தேவை.
உங்கள் உடலின் குணமாக்கும் சக்தியை நம்புங்கள்.
போதைப் பொருட்களைத் தவிர்த்து மனதில் உறுதியாக இருங்கள்.

நன்றி : நோய்களும் இயற்கை மருத்துவமும்
டாக்டர் க. திருத்தணிகாசலம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.