வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி

‘உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமைகள் முக்கியம்’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

டில்லியில் ஸ்வமிதா திட்டத்தின் கீழ் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமை அடையாள அட்டைகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம், பயனாளிகளுக்கு பிரதமர் மோடி இன்று (ஜன.,18) வழங்கினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 21ம் நூற்றாண்டில் பருவநிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை, சுகாதார நெருக்கடி, தொற்றுநோய்கள் என எத்தனையோ சவால்கள் ஏற்பட்டன. ஆனால் உலகம் இன்னும் ஒரு பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. இந்த சவால் சொத்துரிமை தொடர்பானது. பல ஆண்டுகளுக்கு முன்பு, ஐ.நா., சபை உலகின் பல நாடுகளில் உள்ள சொத்துகள் குறித்து ஆய்வு செய்தது.

உலகின் பல நாடுகளில் சொத்துக்களுக்கான முறையான சட்ட ஆவணங்கள் மக்களிடம் இல்லை என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. வறுமை குறைய வேண்டுமானால், மக்களுக்கு சொத்துரிமை மிகவும் அவசியம் என்று ஐ.நா., சபை தெளிவாகச் சொன்னது. இந்தியாவின் கிராமங்களில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருந்தும், அந்த அளவுக்கு மதிப்பு இல்லை. காரணம், மக்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளுக்கு சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாததால், மதிப்புகள் குறித்து தெரிவதில்லை.

பல இடங்களில் அதிகாரம் படைத்தவர்கள் வீடுகளை ஆக்கிரமித்திருப்பார்கள். இன்று நமது நாட்டின் கிராம மக்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். ஸ்வமிதா திட்டத்தின் கீழ் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமை அடையாள அட்டைகளை வழங்கி உள்ளேன். 2.24 கோடி மக்களுக்கு இப்போது சொத்து உரிமை அடையாள அட்டை கிடைத்துள்ளன. அனைவரின் வளர்ச்சி மற்றும் நம்பிக்கையை நாங்கள் விரும்புகிறோம்.

ட்ரோன்களின் உதவியுடன், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள வீடுகளின் நிலத்தை வரைபடமாக்க முடிவு செய்தோம். கிராமவாசிகள் தங்கள் சொத்துக்களின் ஆவணங்களைப் பெறுவார்கள். இன்று, இந்தத் திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கும்போது, ​​கிராமங்களுக்கும் ஏழைகளுக்கும் சேவை செய்ய முடிந்தது என்பதை அறிந்து திருப்தி அடைகிறேன். பயனாளிகளின் முகங்களில் காணப்படும் மகிழ்ச்சி, மனநிறைவு மற்றும் தன்னம்பிக்கை உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இதை நான் ஒரு பெரிய ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...