முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் எதற்கு பயன்படுகிறது ? அண்ணாமலை கேள்வி

முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் நீதியை நிலை நாட்டுவதற்கு பதில் உண்மையை மறைக்கவே பயன்படுத்தப்படுகிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் விதிகள் மற்றும் சட்டங்களை மதிக்காமல் நடப்பது வழக்கமாகிவிட்டது. இந்த அரசின் செயல்பாட்டின் உண்மையை உயர் போலீஸ் அதிகாரியால் கூட பேச முடியவில்லை. துணை ஆய்வாளர் நியமனத்தில் தற்போதைய மற்றும் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளை ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் சுட்டிக்காட்டினார். அதற்குப்பரிசாக அவரது அலுவலகம் எரிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் தீ விபத்து நடந்தபோது அவர் இருந்திருந்தால் அவர் உயிரை இழந்திருக்கலாம். மிக மோசமான விஷயம் என்னவென்றால், இந்த விஷயத்தில் உண்மையான விசாரணை நடத்த வேண்டும் என்ற அவரது தொடர்ச்சியான வேண்டுகோளை போலீசார் புறக்கணித்தது ஏன்?

உயர் போலீஸ் அதிகாரிகள் மின்சாரம் காரணமாக ஏற்பட்ட தீ விபத்து என்று கூறி மறைக்க விரும்பினாலும், விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகள் வெட்ட வெளிச்சம் ஆக்கி உள்ளது.

தமிழகத்தில் ஊழல், முறைகேடுகள் மற்றும் தவறான நிர்வாகத்தை அம்பலப்படுத்திய சமூக செயற்பாட்டாளர்களும், அரசு அதிகாரிகளும் கொல்லப்படுகின்றனர்; போலீஸ் உயர் அதிகாரிகள் கூட மாநிலத்தில் பாதுகாப்பாக உணரவில்லை.

முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் நீதியை நிலை நாட்டுவதற்கு பதில் உண்மையை மறைக்க பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...