விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மீண்டும் வருக! பூமி உங்களை மிஸ் செய்தது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் Crew9 விண்வெளி வீரர்கள் மீண்டும் ஒருமுறை விடாமுயற்சி என்ன என்பதைக் நிரூபித்து காட்டியுள்ளனர்.
தனது வாழ்க்கை முழுவதும் முன்மாதிரி பெண்மணியாக தன்னை வெளிப்படுத்தி உள்ளார் சுனிதா வில்லியம்ஸ். அவரின் மன உறுதி, தைரியம் மற்றும் எல்லையற்ற மனித மனப்பான்மையின் சோதனையாக இருந்தது.
விண்வெளி ஆய்வு என்பதும் மனித ஆற்றலின் வரம்புகளை தாண்டியது ஆகும். பாதுகாப்பாக பூமி திரும்ப அயராது உழைத்த அனைவரையும் நினைத்து பெருமைப்படுகிறேன். அறியப்படாத பரந்த உலகில் அவர்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடு என்றென்றும் லட்சக்கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கும்.
விண்வெளி நிலையத்தில் இருந்து, பாதுகாப்பான வருகையை உறுதிசெய்ய அயராது உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |