வரதக்கம் விண்வெளி பற்றி துபாய் இளவரசருடன் பிரதமர் மோடி பேச்சு

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின், துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்துாம், இரு நாட்கள் அரசுமுறை பயணமாக, நேற்று காலை டில்லிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரை, மத்திய சுற்றுலா துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி வரவேற்றார்.

தொடர்ந்து, பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட விவகாரங்களில், துபாயின் முக்கிய பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக, இரு நாட்டு ராணுவத்தினரின் கூட்டு பயிற்சி, ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் இரு நாடுகளின் தொழில் துறையினர் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு:

துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்துாமை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா – -ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான கூட்டணியை முன்னேற்றுவதில், துபாய் முக்கிய பங்கு வகித்துள்ளது.

இந்த சிறப்பு பயணம், நம் ஆழமான வேரூன்றிய நட்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. எதிர்காலத்தில் இன்னும் வலுவான ஒத்துழைப்புக்கு அது வழிவகுக்கிறது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டார்.

முன்னதாக, துபாய் பட்டத்து இளவரசருடன், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச்சு நடத்தினர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – � ...

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – அமெரிக்கா பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் அதிகரித்து வரும் ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இண� ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட முடியும்: ஜேபி நட்டா சமூகத்தின் முன்னேற்றத்திற்காக, ஆன்மிகமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைந்து செயலாற்ற ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே ப� ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். இதற்கு எதிராக ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள� ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களு� ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களுக்கான அடிக்கல் ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்� ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை அதிகரிக்கும் விழிஞ்ஞம் துறைமுகத்தை திறந்த பிரதமர் பேச்சு கேரளாவின் திருவனந்தபுரத்தில், விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்த ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...