ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு டாக்டர் பட்டம்: ஸ்லோவாக்கியா பல்கலை கவுரவிப்பு

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி, ஸ்லோவாக்கியா பல்கலைக்கழகம் கவுரவித்துள்ளது.

அரசு முறை பயணமாக போர்ச்சுக்கல் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, அடுத்ததாக ஸ்லோவாக்கியாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அதிபர் பீட்டர் பெல்லேக்ரினியை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்து பேசினார்.

அப்போது, இந்திய தத்துவ இலக்கியங்களின் ஸ்லோவாக்கியா மொழிபெயர்ப்பு அடங்கிய புத்தகங்களை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரிசாக வழங்கப்பட்டது. அவர் ஸ்லோவாக்கியா கான்ஸ்டன்டைன் பல்கலைக்கழக வளாகத்தை பார்வையிட்டார்.

பொது சேவையில் ஜனாதிபதியின் சிறந்த பணிகளைப் பாராட்டி அந்த பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. ஸ்லோவாக்கியாவில் இந்திய சமூகத்தினரை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவிற்கும் ஸ்லோவாக்கியாவிற்கும் இடையே உறவுகள் வளர்ந்து வருகிறது.

யோகா, ஆயுர்வேதம் மற்றும் இந்திய உணவு வகைகள் போன்றவற்றால் இந்திய பாரம்பரியம் பிரபலப்படுத்தப்படுகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துகிறது. இது சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பயனளிப்பதை உறுதி செய்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஜனாதிபதி ஒருவர் ஸ்லோவாக்கியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா மட்டும் தான் போரில் இரு ...

இந்தியா மட்டும் தான் போரில் இருந்து ஒதுங்கி வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கையில் ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்த ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்தியாவைக் குறை கூறுவது தவறான தகவல் தந்திரமாகும். ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena-வை அமெரிக்கா மூழ்கடிக்க "அனுமதித்ததற்காக" ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த்தியாக இந்தியா ஆகும். 2023 க்கு முன்பு வெறும் 2 அல்லது 3% ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மா ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு – பிரதமர் மோடி உரை வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப் ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் திறந்து வைக்கும் மோடி தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்ச ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்சியடைந்த பாரதத்தின் அடித்தளமாக விளங்கும் மகளிர் சக்தி * சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...