கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம்

நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. இதற்காக கல்வியை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து உள்ளது ,” என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

டில்லியின் பாரத மண்டபத்தில் நடந்த கருத்தரங்கத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: 21வது நூற்றாண்டின் தேவையை எதிர்கொள்ள இந்தியாவின் கல்விஅமைப்பை நவீனப்படுத்ம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. சர்வதேச கல்வித் தரத்தை மனதில் வைத்தே தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டது.

ஆராய்ச்சியாளர்களை ஆதரித்து, கல்வி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினர் வழிகாட்ட வேண்டும். இன்றைய இளைஞர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளில் முக்கியமான பங்களிப்புகளை அளிக்க இந்திய இளம் தலைமுறையினர் தயாராகி வருகின்றனர்.

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு இரு மடங்காகி உள்ளது. 2013 -14 நிதியாண்டில் ரூ.60 ஆயிரம் கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு தற்போது 1.25 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது. 6 ஆயிரம் உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு என மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

சேவை மற்றும் பொது நலத்துடன் வாழ்வதே உண்மையான வாழ்க்கை என வேதங்கள் கூறுகின்றன. அறிவியலும், தொழில்நுட்பமும் சேவைக்கான ஊடகங்களாக செயல்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...