கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆக பதவியேற்க உள்ள மார்க் கார்னிக்கு, நமது பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
கனடா பார்லிமென்டிற்கு நடந்த தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி முன்னிலையில் உள்ளது. அக்கட்சி தலைவர் மார்க் கார்னி மீண்டும் பிரதமர் ஆக பதவியேற்க உள்ளார். அவருக்கு பல நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கனடா பார்லிமென்ட் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றதற்கும், பிரதமர் ஆக பதவியேற்க உள்ளதற்கும் மார்க் கார்னிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவும் கனடாவும் பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகளாலும், சட்டத்தின் ஆட்சியை நிறுவுவதை உறுதி செய்வதற்கும், மக்களுக்கு இடையேயான துடிப்பான உறவுக்கும் உறுதி பூண்டுள்ளது. நமது ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களுக்கான நமது வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும், உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக காத்திருக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் கூறியுள்ளார்.
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |