ராகுல் காந்தி, கார்கேவால் தங்கள் கட்சியை கட்டுப்படுத்த முடியவில்லையா?- பாஜக எம்.பி. கேள்வி

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இரு நாடுகளில் படைகளை உஷார்படுத்தி வருகின்றன.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், பஹல்காம் தாக்குதலுக்கு பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை குறைபாடுதான் காரணம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, பாகிஸ்தானுக்கு எதிராக போருக்கு நாங்கள் ஆதரவாக இல்லை. நாங்கள் போரை விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

சித்தராமையா பேசிய வீடியோவை பாகிஸ்தானின் முக்கிய செய்தி நிறுவனம ஒளிப்பரப்பியது. போருக்கு எதிராக இந்தியாவிற்குள் இருந்து வரும் குரல் என்றும் செய்தி வெளியிட்டது.

இந்த நிலையில் பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-

ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரால் தங்கள் கட்சியை கட்டுப்படுத்த முடியவில்லையா?. அவர்கள் விரும்பியதை பேச அனைவருக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் அனைத்து அறிக்கைகளும் பாகிஸ்தானில் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு ஒரு ஊடக பிரசாரம் நடந்து வருகிறது.

நாடு பொதுவான தொனியில் பேச வேண்டிய நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு முன்னால் நாட்டை இழிவுபடுத்துகிறார்கள். நீங்கள் (ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே) என்ன செய்கிறீர்கள்?. சித்தராமையாவிடம் ஏதேனும் கேள்விகள் கேட்கப்பட்டதா? யாரிடமாவது பொது மன்னிப்பு கேட்கச் சொல்லப்பட்டதா?. இந்த அணுகுமுறையை நாங்கள் கண்டிக்கிறோம்.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உரு ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி” – பிரதமர் மோடி உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் ​பாஜக​வின் 47-வது நிறுவன நாளை முன்​னிட்​டு, நாடு முழு​வதும் ...

மருத்துவ செய்திகள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...