பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டிய இந்தியா

அன்று உரி, புல்வாமா, இன்று பஹல்காம் என பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா மீண்டும் பாடம் புகட்டி இருக்கிறது.

ஜம்முகாஷ்மீர் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளால் ஏப்.22ம் தேதி கொல்லப்பட்டனர். யாதும் அறியாத சுற்றுலா பயணிகள் சிந்திய ரத்தத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மே 7ம் தேதி நள்ளிரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை அதிரடியான ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பாடம் புகட்டி இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கங்கள் அத்துமீறி தாக்குதல்கள் நடத்தும் போது உரிய தருணங்களில் பாடம் புகட்டி இருக்கிறது இந்தியா.

2016ம் ஆண்டு உரி தாக்குதல், புல்வாமா தாக்குதல், அதனைத் தொடர்ந்து, இப்போது பஹல்காம் தாக்குதல் என பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களுக்கு குறுகிய காலக்கட்டத்திலேயே இந்தியா பதிலடி தந்திருக்கிறது. உரி தாக்குதல் நடந்த 10 நாட்களுக்கு பின்னர் இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. புல்வாமா தாக்குதல் முடிந்து 11 நாட்களில் பதிலடியை இந்தியா அரங்கேற்றியது.

தற்போது பஹல்காம் சம்பவம் நிகழ்ந்து 15 நாட்களில் கடந்த 2 முறையிலும் இல்லாத முறையில் போர்க்கால ஒத்திகை, இருநாடுகள் இடையே போர் பதற்றம் என்ற கோணங்களில் நடவடிக்கைகள் எடுப்பதாக பாகிஸ்தானை திசை திருப்பி, ஆபரேஷன் சிந்தூரை நிறைவேற்றி இருக்கிறது இந்திய ராணுவம்.

அனைத்துவித நடவடிக்கைகளிலும் பாகிஸ்தான் மற்றும் அதற்கு நேரிடையான மற்றும் மறைமுக ஆதரவு அளிக்கு நாடுகள், பயங்கரவாத இயக்கங்களுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளதாக பலரும் புகழாரம் சூட்டி வருகின்றன.

ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தானின் பயங்கரவாத குரல்வளையை தற்காலிகமாக நெரித்துள்ளது எனலாம். நினைத்தது நடந்தது என்பது ஒரு புறம் இருந்தாலும் பயங்கரவாதத்தின் ஆணிவேரை கண்டறிந்து அதை பிரதமர் மோடி அட்சரசுத்தமாக அழிக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பில் இருந்து ஒலிக்கும் குரல்களாக உள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...